Monday, January 19, 2009

அமெரிக்கத் தூதரகம் முன்பாக நாளை நோர்வ தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வரிசையில் நாளை செவ்வாய்க்கிழமை (20.01.09) காலை 9:30 நிமிடம் முதல் 10:30 நிமிடம் வரை நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினைத் தடுத்திட, உடனடிப் போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு அமெரிக்கா கொடுத்திட வேண்டும் எனவும் சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்தக் கோரியும் இக்கவனயீர்ப்பு மூலம் வலியுறுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அன்று அமெரிக்காவின் 44 ஆவது அரச தலைவராக தெரிவு செய்யப்பட்ட பாராக் ஒபாமா பதவியேற்கவுள்ளார்.

அமெரிக்கத் தூதரக முகவரி:
Henrik Ibsens gate 48, 0244 Oslo

Blog Archive