Friday, September 17, 2010

எழுவாய் தமிழா நெருப்பாய் பெல்யியம் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்


தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் மனித நேயர்கள் மூவரிநால். ஜெனிவா ஐநா முருகதாசன் திடலில் இருந்து பெல்யியம் ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி.


ஆரம்பிக்கப்பட்ட மனித நேய நடைபயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்தை வந்தடையும் நாளன்று. 27 .09 .2010 .திங்கள் நண்பகல் 2 மணிக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக எழுச்சி பொங்க அணிதிரண்டு வருமாறு தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளையும் அன்போடு இரு இருகரம் கூப்பி உங்கள் வாசலில் வந்து உரிமையோடு அழைக்கிறோம். தாய் தமிழகத்தில் இருந்தும் தமிழீழத்தில் இருந்தும் தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்

*மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்*

தமிழீழ மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தமிழீழ தனியரசை அமைப்பதற்காக!

*முப்பத்து ஐந்து ஆயிரம் வீரர்கள் மரணித்துக் கேட்டார்கள்*

*ஆயிரம் வீரர்கள் கந்தக வெடியாக வெடித்துக் கேட்டார்கள்*

*இரண்டு தியாகிகள் உண்ணாமல் இறந்து கேட்டார்கள்*

*பல தியாகிகள் தீயிலே எரிந்து கேட்டார்கள்*

*பல உணர்வாளர்கள் உண்ணாமல் இருந்து கேட்டார்கள்*

*பல உணர்வாளர்கள் இப்போது நடந்து கேட்கிறார்கள்*

*நாங்கள் என்ன செய்யப் போகிறோம் சிந்திப்போம் செயற்படுவோம் எதையும் சந்திப்போம்*

!தமிழரசன்.தி.ஈழம்5 .கொம்!நன்றி

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

Blog Archive