Wednesday, June 30, 2010

பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! ஒன்றுகூடுவோம்-- 30.06.2010 புதன்கிழமை

நாம் தோற்று போய்விட்டோமே என்று ஒருபக்கம் நாம் அடங்கிபோய் இருக்க நாம் தோற்று போய்விடோமா என்பதே கேள்வி. "நாமொன்றும் தோற்று போகவில்லை சில சண்டை களங்களை இழந்திருக்கிறோம்.

ஆனால் போர் ஒன்றும் முடிந்துவிடவில்லை." பிரான்சு நாட்டின் ராணுவத் தலைவர் ஜூன் மாதம் 18 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு பிரான்சு நாடு ஜேர்மனிய நாசி இராணுவத்தின் ஆயுத பலத்தின் முன் தோல்விகண்ட போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்து உலங்கெங்கும் வாழும் பிரெஞ்சு மக்களுக்கும் பிரான்சில் ஜேர்மனிய படையிடம் சிக்கி தமது உரிமைகளை வலியுறுத்த முடியாமல் இருந்த மக்களுக்கும் அவர் என்று விட்ட செய்தி அது.

இன்று நாமும் அதே நிலையில் தான் இருக்கிறோம் ஆனால் நாம் தோற்கவில்லை. 30 வருடங்களுக்கு முன்னும் அதன் பின்பும் அகதியாய் வந்து இறங்கிய ஈழத்து தமிழன் உலகத்தின் சமுக பண்பாட்டு பொருளாதார சகதியாய் உருவாகி இருக்கிறான்.

இன்று நாம் பலம் வாய்ந்த இனமாக உலகெங்கும் பறந்து இருக்கிறோம். அன்று பிரான்சு நாடு அந்நிய படையிடம் அடிமை பட்டிருந்தபோது அன்று ஒரு பிரெஞ்சு சாதாரண ராணுவ அதிகாரி ஒரு இனத்தின் விடுதலைக்காக தான் தஞ்சம் புகுந்த நாட்டில் இருந்து குரல் கொடுத்தான் அந்த இனத்தின் விடுதலைக்கு வழி வகுத்தான்.

இன்று அதே நிலையில் இருக்கும் நாங்கள் சரியான வழியில் சிந்தித்து செயல்படவேண்டும். ஈழம் சாத்தியமா என்று பல பேர் கேட்கலாம் அந்த சந்தேகத்தில் துவண்டு இருக்கலாம் ஆனால் அந்த 40000 போராளிகள் விட்டு சென்ற கனவு அந்த விடுதலைக்காய் அந்த மண்ணுக்கு இறைத்த ரத்தம்.

விடுதலைக்காய் 200000 எம்மக்கள் கொடுத்த தியாகம். இன்று உலகெங்கும் பலம் வாய்த்த இனமாக உருவாகி வரும் நாம் இதில் ஐயம் கொள்ள வேண்டிய தேவை இல்லை. ஈழம் மலரும்! மலர வைப்போம்.

பயணங்கள் கரடு முரடாக இருக்கலாம் ஆனால் முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. அங்கு சிறைபட்டிருக்கும் 12000 க்கு மேலான போராளிகளையும் பல வருடங்களாக ஸ்ரீ லங்கா சிறையில் வாடும் தமிழ் மக்களையும் முகாம்களில் இன்னும் சிறை வைக்கப்படிருக்கும் மக்களையும் விடுதலை செய்யவோ அங்கு அபிவிருத்திகளை செய்யவோ எதுவாக இருந்தாலம் உலக நாடுகளின் பலமான குரல் தான் ஸ்ரீ லங்காவில் அந்த சிங்கள அரசில் மாற்றத்தை கொண்டுவரலாம்.

எம் உறவுகளின் அழிவில் வெற்றி கொண்டாடும் சிங்கள இனம் எமது மாவீரர்களின் சமாதிகள் மக்களின் அழிவுகள் மேல் நின்று விகாரைகள் கட்டும் சிங்கள இனம் அவர்கள் மேல் உலக அழுத்தங்கள் அதிகரிக்கும் போது சிங்கள நாடு உலக நாடுகளிடையே தனிமை படுத்தப்படுபோது இந்த உலகம் தமது தவறுகளை உணரத்துவங்கும் போது தியாங்களை செய்ய எம்மை நாம் தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

இன்று அந்த மாற்றங்கள் நடந்து கொண்டு இருக்கிறது அந்த மாற்றங்களுக்கு அமைய எம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். இன்று போராட்டம் புலம் பெயர்நாடுகளில் இருந்துதான் உருவாகப்போகிறது. அதில் பிரிவினை வாதத்தை வளர்க்கத்தான் ஸ்ரீ லங்கா அரசு அத்தனை வழிவகைகளையும் கையாண்டு கொண்டிருகிறது.

ஈழம் தமிழ் இனத்தின் பொதுக்கனவு. எமது போராட்டம் இன்று ஆயுதம் தாங்கி செல்லவில்லை உலகம் எம்மை கேட்டு கொண்டதுக்கு இறங்க எம் போராட்டம் ஜனநாயகம் ஆக ஆக்கப்படிருகிறது அந்த வழியில் உலக நாடுகளிடம்இ இவர்களால் தான் எம்மக்களை விடுதலை செய்ய முடியும் அரசியல் தீர்வையும் உருவாக்க முடியும்.

இன்று சர்வதேச மனிதவுரிமைகள் அமைப்பும் சர்வதேச போர் குற்றங்களுக்கான அமைப்புக்களும் விசாரணையை மேற்கொள்ளுமாறு அறிக்கையை விட்டுள்ள அதே நேரத்தில் பெரும் நெருக்கடிகளையும் உயிர் இழப்புக்களையும் தாங்கி உண்மையை உலகிற்கு கொண்டு வந்திருக்கும் இவ்வேளையில் அதற்கு உறுதுணையாய் நிற்காமல்? புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் நாங்கள் இன்னும் எதுநடக்க வேண்டும்? என்று எதிர்பார்க்கின்றோம்? இந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களை குறைந்த பட்சம் சர்வதேச நீதிக்கூண்டில் விரைவில் ஏற்றுவதற்கு நாம் வாரத்தில் 3மணி நேரம் மட்டும் இறந்து போன இன்னும் சித்திரவதைகளுக்குள் சிக்குண்டு போயுள்ள எமது உறவுகளுக்கு குரல்கொடுக்க வேண்டாமா?

காலம். 30.06.2010 புதன்கிழமை

பி.பகல் 15.00மணி முதல் 18.00 மணிவரை

பிரெஞ்சு பாராளமன்றம் (Assemblée Nationale ) முன்பாக

Metro: Assemblé Nationale ligne 12 , Invalides ligne 8 et 13

தொடர்பு : 06 15 88 42 21

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Blog Archive