
தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்து உழைக்கவும் நோர்வே வாழ் தமிழீழ மக்களின் நலன்களுக்காக செயற்படவும் "நோர்வே ஈழத் தமிழர் அவை" எனும் புதிய ஜனநாயக அமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் நாள் நடாத்தப்படவுள்ளது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக அமைப்பாக நோர்வே ஈழத்தமிழர் அவையானது அமையவிருப்பதாக இவ் அமைப்பினை உருவாக்குவதற்கான செயற்குழு தெரிவித்துள்ளது. அந்த செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...