Friday, August 13, 2010

லண்டனில் நாளை (14-8-2010) செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.

செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், மலர் வணக்கமும் லண்டனில் நாளை 14-08-2010 அன்று நடைபெறவுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட 61 சிறுவர்களின் நினைவுநாளான அதே நாளான நாளை சனிக்கிழமை இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.



லண்டன் ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு தூபி, மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற வுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நினைவுவணக்க நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களின் உரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட 61 மாணவச்செல்வங்களுக்கும் உங்கள் உரிமை கலந்த அஞ்சலியை செலுத்தி அந்த நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு அவர்களின் தியாகங்களை பெருமைப்படுத்துவதோடு, அவர்களின் ஆத்மசாந்திக்கும் பிரார்தனை செய்யுமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வின் போது இதுவரை போரினால் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்குமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை உள்ளடக்கிய நினைவு ஆலயமும் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு இடம்பெறும் இடம்: 180-186 UPPER TOOTING ROAD, TOOTING, LONDON, SW17 7EJ

காலம்: 14-08-2010 சனிக்கிழமை

நேரம்: மதியம் 12 மணிக்கு ஆரம்பம் (மதியம் 12 மணிமுதல் மாலை 9 மணி வரை மக்கள் இந்த மலர்வணக்கத்தில் ஈடுபடலாம்)

Blog Archive