Monday, September 29, 2008

இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறுநூல் அறிமுகமும் வெளியீடும்


கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய:

'இலங்கையில் தமிழர்: ஒரு முழுமையான வரலாறு"

நூல் அறிமுகமும் வெளியீடும்

இருமொழிகளில் (தமிழ், ஆங்கிலம்) கி.மு 300 இலிருந்து கி.பி 2000 வரையான 2300 ஆண்டு காலத்தின் ஆய்வுப் படைப்பு!

வரலாற்றுப் பதிவு:

இனத்தின் இருப்பிற்கு வழிகாட்டி!

காலம்: 03.10.2008
வெள்ளி மாலை 6:30மணி

இடம்: ஸ்காபரோ நகரமண்டப உள்ளரங்கு

Scarborough Civic Centre, 150 Borough Drive

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Friday, September 26, 2008

கனடிய ஒலி வழி ஊடகங்களின் ஒன்றிணைந்த ஒலிபரப்பு

நோர்வேயில் எதிர்வரும் திங்கள் அடையாள உண்ணாநிலை போராட்டம்

தமிழ் மக்கள் மீது இன அழிப்புப் போரினைக் கட்டவிழ்த்து விட்டுள்ள சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து நோர்வேயில் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளன.
நோர்வே நாடாளுமன்ற முன்றலில் எதிர்வரும் திங்கட்கிழமை (29.09.08) காலை 8:00 மணிமுதல் அடுத்த நாள் பிற்பகல் 3:00 மணி வரையான 32 மணித்தியாலங்களில் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் தமிழ் மக்களுக்கான வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை அறிந்திருந்தும், பாராமுகமாய் இருக்கும் உலகின் மனச்சாட்சியை கேள்வி கேட்கும் முகமாக இக்கவனயீர்ப்பினை ஏற்பாடு செய்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அனைத்துலக உதவி நிறுவனங்களை வன்னி மண்ணிலிருந்து வெளியேற்றி, எமது மக்கள் மீது இன அழிப்பு (Genocide) போரினை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்கா பேரினவாத அரசைக் கண்டிக்குமாறு கோரியும்,

எமது மக்களுக்கு ஆதரவாக, அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் உணர்வெழுச்சியை வெளிப்படுத்தும் முகமாகவும் அணிதிரள்வோம்.

இக்கவனயீர்ப்பின் அவசரத்தையும் அவசியத்தையும் உணர்ந்து, வேலைத்தளங்களில் முன்கூட்டியே விடுப்பினைப் பெற்று, மரணத்துள் வாழும் எமது மக்களின் உரிமைகளுக்காக வயது பேதமின்றி அனைவரும் இந்த அடையாள உண்ணாநிலைப் போராட்டத்திலும் கவனயீர்ப் போராட்டத்திலும் அணிதிரள்வோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 24, 2008

தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோர் 30 மணிநேர உண்ணாநிலை

கனடாவின் ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ பெரும்பாகத்தில் தமிழ் இளையோர்கள் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை நடத்தவுள்ளனர்.

தாயகத்தில் இடம்பெயர்ந்து உண்ண உணவின்றி வாடும் மக்களுக்கு உணவு வழங்கிட ஆதரவு தெரிவிக்குமாறு கோரி இந்த உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வினை கனடா வாழ் தமிழ் இளையோர்கள் தொடங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வு

10865 Bayview Ave இல் அமைந்திருக்கும் றிச்மன்ட்கில் பிள்ளையார் கோவிலில் எதிர்வரும்

வெள்ளிக்கிழமை (26.09.08) மாலை 4:00 மணி தொடக்கம்

அடுத்த நாள் சனிக்கிழமை இரவு 10:00 மணிவரை நடைபெறவுள்ளது.


நிகழ்வில் கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்று தாயகத்தில் அல்லலுறும் எமது மக்களுக்கு ஆதரவு வழங்கிடுமாறு தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிகழ்வு தொடர்பான மேலதிக விவரங்களை அறிய விரும்புவோர் 647 -834 1075

இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளலாம் என தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

24/09/2008 அன்று ஐ.நா. முன்றலில் வன்னி மக்களின் அவலம் கவனயீர்ப்பு போராட்டம்.

26/10/2008 அன்று சுவிசில் பாடும்குயில் 2008

04/10/2008 அன்று ஆவுஸ்ரேலியாவில் லெப்.கேணல் திலீபன் நினைவெழுச்சி நாள்

30/09/2008 அன்று பிரான்சில் குறும்பட விழா 2008

27/09/2008 அன்று நோர்வேயில் நினைவுக் கலைமாலை

27/09/2008 அன்று சுவிசில் எழுச்சி விழா 2008

26/09/2008 அன்று கனடாவில் தியாக தீபக் கலைமாலை

05/9/2008 தொடக்கம் 05/10/2008 வரை கனடாவில் காத்திருக்கும் உறவுகளுக்கு கைகொடுப்போம்

Blog Archive