Wednesday, September 30, 2009

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற கோரி "புதிய தமிழகம் கட்சி" டெல்லியில் பேரணி

இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற கோரி "புதிய தமிழகம் கட்சி" சார்பில் டெல்லியில் ஒக்டோபர் 2ல் பேரணி நடைபெறுவிருக்கின்றது. இது குறித்து "புதிய தமிழகம் கட்சி"யின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் கடந்த 5 மாதங்களாக முள் வேலிக்குள் 3 இலட்சம் தமிழர்கள் நல்ல உணவு, குடிநீர், உடுக்க உடை, உறையுள் இல்லாமல் சிறீலங்கா இராணுவத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற இந்த மனித உரிமை மீறலைக் கண்டித்தும், கம்பி வேலிக்குள் முடங்கி கிடக்கும் 3 இலட்சம் தமிழர்களையும் அவரவர் இருப்பிடங்களுக்கு செல்ல சிறீலங்கா அரசு அனுமதிக்க இந்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி "புதிய தமிழகம் கட்சி"யின் சார்பில் ஒக்டோபர் 2 ல் டெல்லியில் பேரணி நடைபெற உள்ளது.

அந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து "புதிய தமிழகம் கட்சி"யின் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

டுசில்டோப்பில் முள்வேலியை அறித்தெறிய ஒன்றுகூடுங்கள்

சுவிசில் உண்மைக்காய் எழுவோம்

பேர்லின் நோக்கிய ''தடைகளை உடைப்போம்'' எழுச்சிப் பேரணி

Blog Archive