
இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற கோரி "புதிய தமிழகம் கட்சி" சார்பில் டெல்லியில் ஒக்டோபர் 2ல் பேரணி நடைபெறுவிருக்கின்றது. இது குறித்து "புதிய தமிழகம் கட்சி"யின் நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கடந்த 5 மாதங்களாக முள் வேலிக்குள் 3 இலட்சம் தமிழர்கள் நல்ல உணவு, குடிநீர், உடுக்க உடை, உறையுள் இல்லாமல் சிறீலங்கா இராணுவத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற இந்த மனித உரிமை மீறலைக் கண்டித்தும், கம்பி வேலிக்குள் முடங்கி கிடக்கும் 3 இலட்சம் தமிழர்களையும்...