
எமது பதிப்புக்கள்
Friday, April 29, 2011
நாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.



Sunday, January 30, 2011
பெப்பிரவரி 4இல் உரிமைக்கான போராட்டம் – கனடித்தமிழர் தேசிய அவை அறைகூவல்



63 ஆண்டுகள், 1லட்சத்து 50ஆயிரத்திற்கு மேற்பட்ட இழப்புக்கள், இன்றும் எமது இழப்புக்கள் தொடர்கதையே. தன்னைத் தற்காத்துக் கொள்ள விலங்கினமே போராடும் இப்பூமிப்பந்தில் நாம் மட்டும் அழிந்துபோவதா?
முதலில் இக்கரிநாளில், சிங்களத்துடன் சேர்ந்து கூடிக்களிப்பதை தவிர்ப்போம், புறக்கணிப்போம். அதேநாளில் தமிழர் நாம் சேர்ந்து எமது நிலையை சர்வதேசத்திற்கு தொடர்ந்தும் வெளிப்படுத்துவோம். தென் சூடானின் மக்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் அதிசயமும் இந்த ஆண்டில் தான் நடந்தது. நாமும் எமக்கு உரித்தான உரிமையைவேண்டி தொடந்தும் ஓர்மத்துடன் யாசிப்போம்.
தமிழீழ தேசத்தில் தொடரும் சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், தமிழீழ மக்கள் மீது தொடரும் சிங்கள தேசத்தின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்தும், தமிழீழ தேசத்தின் இருப்பையும், இறமையையும் வலியுறுத்தியும், ரொரன்ரோவில் 30 St. Clair Avenue West, (St. Clair & Yonge) இல் அமைந்துள்ள சிறீலங்கா துணைத்தூதுவராலயம் முன்பாக கனடிய தமிழர் தேசிய அவையினால் வெள்ளிக்கிழமை, பெப்பிரவரி 4, 2011, பிற்பகல் 2:00 மணிமுதல் மாலை 6 மணிவரை உரிமைக்கான சர்வதேச கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது.
தமிழீழ தேசத்தின் சுதந்திரம் மீண்டும் பறிக்கப்பட்ட இத்தமிழரின் கரிநாளில் பெருமளவில் கலந்து கொண்டு இச்சர்வதேச கவனயீர்ப்புக்கு வலுச்சேர்க்குமாறு அனைத்து கனடா வாழ் தமிழ் மக்களையும் கனடியத் தமிழர் தேசிய அவை உரிமையுடன் வேண்டிக் கொண்டுள்ளது.
வாருங்கள்…. தமிழர் வாழ்வை நிமிரவைக்க வாருங்கள்…. வீழ்ந்தோம் என்பது வரலாறல்ல… எழுந்தோம் என்பதே வரலாறு… என அது மேலும் அறைகூவல் விடுத்துள்ளது.
மேலதிக விபரங்களுக்கு கனடியத் தமிழர் தேசிய அவையுடன் 1-866-263-8622 என்ற தொலைப்பேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்
Thursday, January 20, 2011
போர்குற்றவாளி மகிந்தவை கைது செய்யக் கோரி மொன்றியல்,ரொரன்ரோவில் ஆர்ப்பாட்டப்போராட்டம்



இவ்வாறு பிரித்தானியாவிற்கு தனிப்பட்ட விஐயமாக சென்ற போது பிரித்தானிய உறவுகள் மேற்கொண்ட தொடர் மக்கள் மயப்படுத்தப்பட்ட மற்றும் சட்ட நடவடிக்கைகளால் மகிந்தா பிரித்தானியாவை விட்டே ஒடியது எம் நினைவில் பசுமையாகவே உள்ளது.
இது எமது தருணம். அமெரிக்க உறவுகள் ஒழுங்கமைப்புகளை அறியத்தரும் வரை எமது களத்தைத் திறப்போம். வாருங்கள் பெரும் எண்ணிக்கையில் வாருங்கள். கொலை வெறியனைக் கூண்டில் ஏற்றுவோம். சர்வதேச மன்னிப்புச் சபையும் அமெரிக்காவில் கைது செய்து போர் குற்ற விசாரணையை வலியுறுத்தியுள்ள நிலையில் நாமும் வலியுறுத்துவோம்.
----------------------------------
மொன்றியல்
இடம் அமெரிக்க துணைத்தூதராலயம் மொன்றியல்
1155 Rue Saint Alexandra (Corner of Rene Levesque
Metros Place Des Arts, Place d armes
காலம்: வெள்ளிக்கிழமை, சனவரி 21 2011
நேரம்: பிற்பகல் 1 மணிமுதல், மாலை 6 மணிவரை
----------------------------------------------------------
இடம்: அமெரிக்க துணைத்தூதரலாயம், ரோரன்ரோ
360 University Avenue. (Subway: St. Patrick)
காலம்: வெள்ளிக்கிழமை, சனவரி 20, 2011
நேரம்: பிற்பகல் 2 மணிமுதல், மாலை 7 மணிவரை
---------------------------------------------------
மொன்றியல் ,ரோரன்ரொவில் நாம் மூட்டும் நீதிவேண்டிய தீ, அமெரிக்கா முழுமையாகப் பரவட்டும்
அலைகடலென வாரீர்.. அது எங்கள் களம்.. நீதிவேண்டிய போர்க்களம்..
மேலதிக தொடர்புகளுக்கு:
கனடியத் தமிழர் தேசிய அவை -
1-866-263-8622 1-866-263-8622
Friday, January 14, 2011
கனடாவில் கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 18ம் ஆண்டு நினைவாக “தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும்”



வங்கக் கடலில் வீர காவியமான கேணல் கிட்டு உட்பட 10 வீர வேங்கைகளின் 18ம் ஆண்டு நினைவாக கனடியத் தமிழ் மாணவர் சமூகமும், கனடியத் தமிழர்கலைபண்பாட்டுக் கழகமும் இணைந்து வழங்கும் “தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும்” ஸ்காபுரோவில், (733 BIRCHMOUNT ROAD) அமைந்துள்ள
கனடா கந்தசுவாமி கோவில் மண்டபத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 16ம் திகதி மாலை 6:00 மணிக்கும், மிசிசாகாவில் (30 Bristol Road West) Saviour of the World மண்டபத்தில் ஜனவரி 22- 2011 சனி, மாலை 6: மணிக்கும் இடம்பெறவுள்ளது.
மற்றும் மொன்றியலில் (800, marchel Laurent) தேவாலைய மண்டபத்தில் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை 16ம் திகதி மாலை 6:00மணிக்கும் இடம்பெறவுள்ளது.
www.maaveerarillam.com இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வும் இவ்வைபவத்தில் இடம்பெறும் காலத்தால் அழிக்க முடியாத வீர மறவர்களின் நினைவுகளையும் சாதனைகளையும் புதிவாக்கி, உலகலாவிய மக்களின் பார்வைக்காக www.maaveerarillam.com உருவாக்கப்பட்டுள்ளது எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம் பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Wednesday, January 12, 2011
ரொரன்ரோவில் தமிழ்க்கணிமை, விக்கிப்பீடியா, நூலகப் பயிற்சிப் பட்டறை



தமிழ்க்கணிமை, விக்கிப்பீடியா, நூலகப் பயிற்சிப் பட்டறை
எப்படித் தமிழில் தட்டச்சு செய்யலாம்?
தமிழில் நல்ல வலைத்தளங்கள் என்ன?
உலகத் தமிழர்களுடன் இணையம் ஊடாக எப்படிக் கூட்டாக இயங்கலாம்?
தமிழில தேடலாமா?
தமிழ் கணிமையின் ஆராய்ச்சி முனைகள் என்ன?
தமிழ் மொழிக்கு நாம் எப்படி பங்களிக்க முடியும்?
தமிழ் மரபுத் திங்களில் ஒரு நிகழ்வாக தமிழ் கணிமை, விக்கிப்பீடியா, நூலகப் பயிற்சிப் பட்டறை வரும் ஞாயிற்றுக் கிழமை, சனவரி 16, 2010 அன்று ரொறன்ரோ இசுக்கார்பரோவில் நடைபெறவுள்ளது.
தமிழ்க் கணிமை
தமிழ் தட்டச்சு, ஒருங்குறி, தமிழ் வலைத்தளங்கள், ஆராய்ச்சி முனைகள்
தமிழ் விக்கிப்பீடியா
பயனர்கள் தொகுக்கும் கட்டற்ற இணையக் கலைக்களஞ்சியம், பன்மொழி அகராதி, செய்திகள், மூலங்கள், நூல்கள், மேற்கோள்கள்.
நூலகத் திட்டம்
இலங்கைத் தமிழர் தகவல் வளங்களை எண்ணிம வடிவத்தில் ஒழுங்கமைக்கும் திட்டம்.
தமிழ் வலைப்பதிவுகள்
உங்கள் கருத்துக்களை உலகமெங்கும் பகிர்ந்திட தடையற்ற வழி.
தமிழ் மொழியில், அறிவியல் தமிழில், தமிழ்க் கணிமையில், கணினித் தொழில்நுட்பத்தில் ஆர்வம் உள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.
நாள்: சனவரி 16, 2011, ஞாயிற்றுக் கிழமை
இடம்: 5310 Finch Ave East, Unit 10, இசுக்கார்பரோ, ஒன்ராறியோ, கனடா
நேரம்: 9:30 - 1:00 மு.ப
Sunday, December 12, 2010
Wednesday, December 01, 2010
ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து கனடியத் தமிழர் நடாத்தும் கண்டன ஒன்றுகூடல்



அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், டிசம்பர் 2ஆம் நாள் வியாழக்கிழமை, முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை ரோரன்ரோ, மொன்றியல் நகரங்களில் அமைந்துள்ள பிரித்தானிய துணைத்தூதரங்களுக்கு முன்னர் கண்டன ஒன்றுகூடல் ஒன்று கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: 777 Bay Street, Toronto (Bay & College) Subway : College
1000 De La Gauchetière St. W. Montreal.
காலம்: முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை
பெருமளவில் கலந்து எமது உணர்வை வெளிப்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
416 646 7624
Friday, November 26, 2010
ரொறன்ரோவில் மாபெரும் எழுச்சியுடன் மாவீரர் நாள்: ஒரே நாளில் நான்கு நிகழ்வுகள்



மாவீரர் நாள் 2010 கனடா
நவம்பர் 27, 2010 -சனிக்கிழமை
ரொறன்ரொவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற ஏற்பாடாகி வருகிறது. ரோறன்ரோவிற்கு வடக்கே அமைந்துள்ள மார்க்கம் நகரில் உள்ள பிரசித்திபெற்ற ‘மார்க்கம் பெயர் கிறவுன்ரில் Markham Fair Grounds) இல் நடைபெறவுள்ளது.
இங்கு மாவீரர்நாளுக்கென விசேடமாக உள்ளரங்கொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கு குளிர்காலத்துக்கேற்றவாறு சூடேற்றப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோரை உள்வாங்கக்கூடியதுமாகும்; அத்துடன் மக்கள் மலர் வணக்கம் செய்வதற்கான மாவீரர் துயிலும் இல்லமும் இங்கு அழகாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கென பிறிதான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது..
இவ் மாபெரும் உள்ளரங்கில் நவம்பர் 27ம் நாள் நான்கு நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் 1ஆம் நிகழ்வு காலை 6.30 மணிக்கும் 2ஆம் நிகழ்வு மதியம் 12.00 மணிக்கும் 3ஆம் நிகழ்வு மாலை 03.00 மணிக்கும் 4ஆம் நிகழ்வு மாலை 06.00 மணிக்கும் ஒழுங்கு செய்துள்ளனர்
மாவீரர்நாள் நிகழ்வை கனடியத்தமிழர் தேசிய நினைவெழுச்சி அகவம் ஏற்பாடு செய்துள்ளது.
நிகழ்வு நடைபெறுவதற்காக 40’x40’ அளவைக்கொண்ட பெரிய மேடையும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இலவச வாகனத்தரிப்பிட வசதி போதியளவு உண்டு
நான்கு நிகழ்வுகள்
1ஆம் நிகழ்வு: காலை 6.30 மணி
2ஆம் நிகழ்வு:; மதியம் 12.00 மணி
3ஆம் நிகழ்வு: மாலை 03.00 மணி
4ஆம் நிகழ்வு: மாலை 06.00 மணி
Markham Fair grounds
10801 McCowan Road
Markham, ON L3P 3J3
(McCowan Road & Elgin Mills Road East)
புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் 2010 நிகழ்வுகள்
Friday, November 05, 2010
டொரன்ரோ பல்கலைக்கழகத்தின் விழிப்பு நிகழ்வு


இவ்வாண்டு, கனடாப் பல்கலைக்கழக மாணவரால் இந்நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நவம்பர் 2, 2010 ஆகிய இன்று இசுகாபரோ ரொரன்ரோ பல்கலைகழக தமிழ் மாணவர் அமைப்பினால் நடாதப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி விழிப்பு நிகழ்வு இனிதே நடைபெற்றது.
இவ்விழிப்பு நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடி மற்றும் தமிழழீழத் தேசியச் சின்னங்கள் மாணவரின் பார்வையை ஈர்க்கும் முறையில் வடிவமைக்கப்பட்டு பார்வைக்காக வைக்கப்பட்டன. இதன் ஊடாக தமிழீழத் தேசியக் கொடி மற்றும் தேசியச் சின்னங்களின் முதன்மைத்துவம் பற்றி அறிவு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மற்றம் வேற்றினத்து மாணவருக்கு ஊட்டப் பட்டது.
தமிழருடைய வரலாற்றில் தமிழீழத் தேசியச் சின்னங்களின் முக்கியத்தவத்தை அறிந்தே அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டாக இவ்விழிப்பு நிகழ்வு நடாத்தப்பட்டது.

Monday, September 13, 2010
ஐ.நா சபைக்கு வரும் மகிந்த ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்து - கனடியத்தமிழர்கள் அறைகூவல்


அவ்வாறு அவர் வருகை தருவாரானால் இலங்கைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அவரை விசாரணை செய்ய வேண்டுமென்று கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

“இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை சிறிலங்கா அரசு வன்னியில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் ஈவிரக்கமின்றிக் படுகொலைசெய்யப்பட்டனர். இவற்றை மூடி மறைத்து சுயாதீன சர்வதேச நீதி விசாரணைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ள கனடியத் தமிழர் தேசிய அவை, ஐ.நாவையும் அதன் விசாரணை முன்னெடுப்புக்களையும் அவமதிக்கும் மகிந்த ராஜபக்சவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிப்பதே மிகப் பெரும் தவறு என்றும் கூட்டுக்காட்டியுள்ளது.
‘சனல் 4’ காணொளிகள் சித்திரவதைகளையும் படுகொலையையும் நிரூபிக்கின்றன. டப்ளின் மக்கள் ஆணையம் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை நிறுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் செயலாளர் போர்க்குற்ற விசாரணைக்கென நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார்.
இந்நிலையில் சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான போர்க்குற்ற விசாரணையை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா சபைக்கூட்டத் தொடரில் அவர் கலந்து கொண்டால் அவருடனான அனைத்து ராஐதந்திர தொடர்புகளையும் அங்கு தவிர்க்குமாறு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தையும் கனடியத்தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆவர்வளர்கள் அனைவர் சார்பிலும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.
இவ்விடயங்களை வலியுறுத்தும் வகையிலும், அமெரிக்க அரசை இவ்விடயத்தில் முதன்மை பங்கை வகிக்குமாறு வலியுறுத்தியும் கனடியத் தமிழர் தேசிய அவை செப்டெம்பர் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு ரொறன்ரோவில் (360 University Ave) அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னாலும், மொன்றியலில் (1155 rue St-Alexandré - Corner Of St-Alexandré & Rene Levesque ) அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னலும் கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்தவுள்ளது.
இதில் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் உரிமையுடன் அழைக்கப்படுகின்றனர்.
மேலதிக தொடர்புகளுக்கு
தொலைபேசி இல: 1866 263 8622 Ext 101
மின்னஞ்சல் முகவரி: info@ncctcanada.ca
Sunday, September 05, 2010
Tuesday, August 17, 2010
கனடிய அகதிகளைக் ஏற்க வாக்களியுங்கள் !!


Yes
No
Undecided
It doesn't make a difference to me
See Results
Please go to this website and vote yes
http://www.cp24.com/
Together 4 Tamils
Please go to this website and vote yes. It is about the 500 TAMILS who arrived in Canada. The poll is very important. Please vote yes and save these peoples lives
The Globe and Mail: Sri Lanka seeks deal to share intelligence on migrants Toronto Star: Ottawa balks at public detention hearings for Tamils CBC: Tamil migrants: 'We are not terrorists' CTV News: 'Have faith in us,' Tamil migrants write Toronto Sun: Cops using Interpol to identify Tamil migrants National Post: Tamil migrants say they are fleeing mass murders AFP: Authorities probe funding for Tamil refugees' travel Canadian Press: One Tamil migrant died at sea: RCMP Rabble :Canada's treatment of the Tamil refugees is a defining moment The Montreal Gazette: RCMP confirm man died on migrant boat Times Colonist: Tamil migrants claim they were fleeing mass murders in Sri Lanka Montreal Gazette: Hearings start Monday for asylum-seekers Al Jazeera: Canada probes Tamil smuggling claim London Free Press: Waiting and hoping News 1130: Migrants deny any links with terrorists Medicine Hat News: Mounties still probing last year's Tamil ship as new arrivals hit shore Toronto Star:Tamil asylum-seekers spark Canadian vitriol, anger AFP: Tamil on ship bound for Canada died at sea: Tamil Congress The Star: RCMP confirm death of Tamil man aboard migrant ship |
Saturday, August 14, 2010
அவசர அறிவித்தல் - கனேடியத் தமிழர் பேரவை



இலங்கையிலிருந்து அகதிகளாக கப்பல் மூலமாக பயணித்த எமது உறவுகள் இன்று காலை விக்டோரியா துறைமுகத்தினை சென்றடைந்துள்ளனர். அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை, கனேடிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களும், தொண்டர்களும் வன்குவரில் நிலைகொண்டு முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் தாயக உறவுகளுக்கான தேவைகள் அதிகம் இருப்பதனால், மனிதாபிமான ரீதியில் உதவுவதற்கு கனேடிய உறவுகளின் ஒத்துழைப்பினை கனேடியத் தமிழர் பேரவை எதிர்பார்த்து நிற்கின்றது. குறிப்பாக வன்குவரில் வாழும் எமது உறவுகளின் ஆதரவு உடனடித் தேவையாக உள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
[ 416] 240 -0078
உடன் தொடர்பு கொள்ளவும்.
சன் சீ கப்பல் பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை சென்றடைந்துள்ளது

கனேடிய பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவிஸ் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த கப்பல் நேற்று காலை அந்த நாட்டில் கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் கனேடிய அரசாங்க அதிகாரிகளின் தகவல்படி கப்பல் நேற்று மாலையளவிலேயே கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் பெண்களும் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், கப்பலில் உள்ள ஒருவர் மாத்திரம் சுகவீனமுற்றுள்ளதாகவும் முன்னர் வெளியான தகவலை போன்று எவரும் மரணமாகவில்லை என்றும் கனேடிய எல்லைப்பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சன் சீ கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை செய்துள்ளது.
இதற்காக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வன்கூவருக்கு சென்றுள்ளனர்.
இந்தநிலையில் ஆர்வமுள்ள உறவுகள் கனடியத் தமிழர் பேரவையுடன்
416 240 0078
416 240 0078
உடன் தொடர்பு கொண்டு மனித நேயப் பணிகளில் ஈடுபடலாம் என தமிழர் பேரவை அறிவித்துள்ளது
Saturday, August 07, 2010
தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான கனடியத் தமிழ் மக்கள் கலந்துரையாடல்



DATE: Monday, August 9th, 2010
TIME: 6 pm to 9 pm
LOCATION: Hart House - Music Room, University of Toronto,
7 Hart House Circle, Toronto, ON
For media inquiries, please contact:
David Poopalapillai, david@canadiantamilcongress.ca or
Manjula Selvarajah, manjulas@canadiantamilcongress.ca.
For general inquiries, please reach the Canadian Tamil Congress at
416.240.0078.
--------------------
200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர்.
ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர்.
அந்த நிகழ்ச்சியின் போது சட்டத்தரணியும், குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான விடயங்களில் நிபுணருமான லோர் வோல்மன் சில மாதங்களுக்கு முன்னர் கடல்மார்க்கமாக வன்கூவரில் வந்து இறங்கிய 76 தமிழ் அகதிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களை எடுத்து விளக்கினார்.
அத்துடன் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும், பெண்கள் குழந்தைகள் உட்பட, 200 அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை தாமதிக்காமல் ஆர்ம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறினார்.
“கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு வழங்க வேண்டிய உடனடி உதவிகள் தொடர்பாக வன்கூவரில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். இந்த அகதிகளின் நிலைமையை வளக்கும் ஆவணங்களையும் நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்,” என கனடியத் தமிழ் தேசிய அவையின் பேச்சாளரான கிருஷ்ணா சரவணமுத்து கூறினார்.
இந்த அகதிகளுக்கு உடனடியான உதவிகளை வழங்குவதற்கு கனடியத் தமிழர் தேசிய அவை வேறு பல தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றார்கள். நடைபெற்ற கலந்துரையாடலின் போது சட்ட ஒழுங்குகளைச் செய்வதற்கும், ஊடகத் தொடர்புகளை மேற்கொள்வதற்கும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத் தொடர்புகளை மேற்கொள்வதற்குமாக பல உபகுழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.
“கனடிய தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் நாம் மதிப்பளிக்கும் அதே வேளை வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளின் பிரச்சினையை மனிதநேயத்துடன் நோக்குமாறு கனடிய அரசாங்கத்தைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,” என தேசிய அவையின் தலைவர் மோகன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
--------------------------
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எம்.வி சன் சீ எனப்படும் கப்பல் முன்னர் எம் வி ஹரின் பனிச்-19 என்ற பெயரை கொண்டிருந்தது (படத்தில் உள்ளது). அது தற்போது 200 தமிழ் மக்களை ஏற்றிக்கொண்டு கனடாவை நோக்கி செல்கின்றது என வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்த கப்பல் தொடர்பில் எமக்கு அதிக தகவல்கள் தெரியாது, ஆனால் அது கனடாவின் வன்கூவர் பகுதியை நோக்கி செல்லலாம் என அமெரிக்கா வெளிவிவகார திணைக்களத்தின் பேச்சாளர் பிலிப் ஜே குறொலி தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டு கொடியுடன் செல்லும் இந்த கப்பலை அமெரிக்காவின் கரையோர காவல்படையினர் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில மாதங்களாக கடலில் பயணம் செய்யும் இந்த கப்பல் எதிர்வரும் வாரத்தின் முற்பகுதியில் பிரிட்டிஸ் கொலம்பியாவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
AUGUST 9TH FORUM ON TAMIL ASYLUM SEEKERS OF CARGO SHIP MV SUN SEA
Toronto, August 6, 2010 - As reports of another boat containing Tamil refugees spread, so does the hysteria around their admissibility, and the means by which they arrive in Canada. Sparked by Sri Lankan government sources, and its intelligence apparatus, these innuendos effectively seek to discredit the would be refugees of their rights to a fair hearing, before they arrive ashore. This time around, there is increasing pressure from Sri Lankan sources to intercept the ship.
As an example, such sources have suggested that our government send it’s military to “thwart threats to Canada”, with the implication that the boatload of refugees are a threat to Canada with little regard for the validity of individual cases. Similar statements made by the same sources with regards to the 76 Tamil asylum seekers who arrived on the Ocean Lady in October 2009 were investigated by Canadian authorities, and no evidence found to that effect.
The Canadian government response to the arrival of the Ocean Lady in October 2009 offers some insight as to how it may respond to this migrant ship: following due process, assessing each case individually, accepting valid cases and rejecting anyone who is seen as a threat to Canadian security.
The Canadian Tamil Congress is organizing an urgent forum to directly address this issue and discuss Canada’s role in protecting refugees. In particular, we will hear from Canadian organizations, and politicians on the Canadian response to these refugees. We will also have on hand asylum seekers from the Ocean Lady who arrived in October 2009 and members of the community who themselves were refugees.
DATE: Monday, August 9th, 2010
TIME: 6 pm to 9 pm
LOCATION: Hart House - Music Room, University of Toronto,
7 Hart House Circle, Toronto, ON
For media inquiries, please contact:
David Poopalapillai, david@canadiantamilcongress.ca or
Manjula Selvarajah, manjulas@canadiantamilcongress.ca.
For general inquiries, please reach the Canadian Tamil Congress at
416.240.0078.
Friday, July 23, 2010
கனடா, ஒன்ராரியோ பாராளுமன்றம் முன்றலில் ஜீலை 25, கறுப்பு யூலை ஒன்றுகூடல்



உலகலாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி, உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்வுகளின் வரிசையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, யூலை 25ஆம் நாள் மாலை 5 மணிக்கு ஒன்ராரியோ பாராளுமன்றம் Queen's Park முன்றலில் பாரிய ஒன்றுகூடல் ஒன்றிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் - கனடா பிரதிநிதிகள், கனடியத் தமிழர் தேசிய அவை ஆகியன அழைப்புவிடுத்துள்ளன.
27 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்றும் 27 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொலைக்குள்ளாகி வருகின்றது.
தனது பொறுப்பில் இருந்து தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேய கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம் என அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.
எம் மக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி இனப்படுகொலை செய்துவரும் சிங்கள ஆட்சியாளர்கள் தற்போது உயிரைக் காக்க தப்பிவரும் தமிழர்களையும் பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி சர்வதேச ரீதியாக தமிழர்களை தனிமைப்படுத்த முயன்று நிற்கின்றது.
இந்நிலையில் எமது ஒன்றுபட்ட எழுச்சியும், காலத்தின் தேவைகருதிய விரைந்த செயற்பாடுகளும் எம் மக்களின் நிலையை வெளிகொணருவதும் அவசியம் என மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வகையில் போர்குற்றங்கள் குறித்து சிறீலங்கா மீது சுயாதீனமான சர்வதேச விசாரணை மேலும் தாமதமின்றி உடன் நடாத்தப்பட வேண்டும்.
போர்க்கைதிகள் அனைவரும் உடனடியாக சர்வதேச கண்காணிப்பில் கொண்டுவரப்பட வேண்டும், நிபந்தனையின்றி விடுவிக்கப்படவேண்டும். மனித உரிமைகளை சிறீலங்கா மதிக்கும் வரை, ராஐதந்திர, பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஓன்றுகூடலின் முக்கிய கருப்பொருள்களாக முன்வைக்கப்பட்டுள்ன.
இலட்சியத்தில் ஓர்மம் கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்ட மக்களே வரலாறு படைப்பார்கள். வாருங்கள், வரலாறாக வாருங்கள், எங்களுக்காக, எங்கள் சொந்தங்களுக்காக வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Wednesday, July 07, 2010
"யூலை 5" நினைவு நாளும், குறுவெட்டு வெளியீட்டு நிகழ்வும்


Sunday, June 13, 2010
கனடிய தமிழர் தேசிய அவை தேர்தல் வேட்பப்பாளார்கள் - யூன் 20



ஞாயிற்றுக்கிழமை யூன் 20ஆம் நாள் நடைபெறவுள்ள கனடிய தமிழர் தேசியஅவைக்கான தேர்தலில் 51 வேட்பாளர்கள், தேசிய, மாகாண மற்றும் பிராந்தியப்படடியல் வேட்ப்பாளா்களாக வேட்பு மனுக்களை தாகக்ல் செய்துள்ளனர்.
யூன் 10ஆம் நாள் மாலை 9 மணியுடன் வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை மீளப்பெறும் காலம்முடிவடைந்துள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரங்களை தேர்தல்ஆணையகமான தமிழர் தேர்தலுக்கான கனடியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாகவெளியிடுகின்றது.




Monday, May 31, 2010
கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல்



National Council of Canadian Tamils Election - 2010
KEY TIMELINES:
NOMINATION PERIOD : 24 MAY 9:00 PM - 5 JUNE 9:00 PM
ALL CANDIDATES MEETING : 6 JUNE 2:00 PM
CAMPAIGN PERIOD : 6 JUNE 6:00 PM - 20 JUNE 9:00 PM
ELECTION DATE : 20 JUNE 9:00AM - 20 JUNE 9:00PM
Tamil Elections Canada become a volunteer to help facilitate the election
process.
Research and understand the NCCT through the web, radio, television and
newspapers.
Spread the knowledge to everyone you know and encourage others to get
involved and vote.
Web: www.tamilelections.ca
Phone: 1-888-759-5002
Email: Info@tamilelections.ca
Facebook: TamilElections Canada
Saturday, May 29, 2010
இனமான இளைஞனை [சுரேஷ் ]காக்க உதவிடும் நிகழ்வு

