Monday, January 10, 2011

லண்டனின் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவெழுச்சி நாள்

இந்தியச் சதியால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட 10 வீரவேங்கைகளையும், இம்மாதத்தில் வீரச்சாவை தழுவிய…


…கப்டன் பண்டிதர், மேஜர் சோதியா, கேணல் சாள்ஸ் உட்பட அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் நினைவெழுச்சி நாள் நிகழ்வு பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

பிரித்தானியத் தலைநகர் லண்டனின் Featherstone High School, 11 Montague Waye, Southall UB2 5HF எனும் இடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 5:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அனைத்து பிரித்தானியா வாழ் தமிழ்மக்களும் கலந்துகொண்டு “எம் சந்ததிக்காய் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு” மலர்தூவி வணங்கிட வருமாறு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்தோடு ஜனவரி மாதத்தில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களின் குடும்பங்களை சேர்ந்த பிரித்தானியாவில் வசிப்பவர்கள் அம் மாவீரர்களின் திருவுருவப் படங்களை தரும் பட்சத்தில் அவர்களின் திருவுருவப் படங்களும் சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் , அது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 14-01-2011 (வெள்ளிக்கிழமை) க்கு முன்பாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களிடம் 07400219654 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Blog Archive