Thursday, August 19, 2010

ஐ. நா நோக்கி நகரும் கால்களுக்கு வலுச் சேர்ப்போம்



சிவந்தனை வரவேற்கத் தயாராகும் சுவிஸ் மக்கள், ஜெனீவா நோக்கி அணிதிரளும் ஐரோப்பிய மக்கள்

தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி இன்று 27வது நாளாக சிவந்தன் மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டு வருகின்றார்.

மலைப்பாங்கான பிரதேசங்களில் சிவந்தன் நடந்து செல்வதால், நேற்று சுவிற்சர்லாந்து எல்லைக்குள் சென்ற போதிலும், மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குள் சென்று ஜெனீவா நோக்கி பிரான்ஸ் நாட்டிற்குள் நடந்து செல்லுகின்றார்.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10:00 மணியளவில் மீண்டும் சுவிஸ் எல்லைக்குள் பேர்லி (Perly) என்ற இடத்தில் சிவந்தன் நுழையும்போது, அவருக்கு பாரம்பரிய இசைமுழங்க, நாட்டியங்களுடன் செங்கம்பள வரவேற்பு அளிக்க சுவிஸ் தமிழ் அமைப்புக்களும், தமிழ் சமூகமும் ஏற்பாடு செய்துள்ளன.

950 இற்கும் மேற்பட்ட கிலோமீற்றர்கள் நடந்து சென்றுள்ள சிவந்தன் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 30 கிலோமீற்றர்கள்வரை மட்டுமே நடக்க வேண்டியுள்ளது.

சிவந்தனுடன் சுவிற்சர்லாந்தில் இருந்து சென்றவர்கள் உட்பட 15 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.

இவர்கள் நடந்து செல்லும் வழிகளில் தமிழ் மக்களின் நிலை மற்றும் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட்டு, பிரெஞ்சு மற்றும் டொச் மக்களிற்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, சிவந்தனது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கிய 300 கிலோமீற்றர் தூர மனிதநேய நடை பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவரும் இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.

  • சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,
  • தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,
  • மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்

போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.

Tuesday, August 17, 2010

கனடிய அகதிகளைக் ஏற்க வாக்களியுங்கள் !!

Will you welcome the Tamil migrants to Toronto?
Yes
No
Undecided
It doesn't make a difference to me

See Results


Please go to this website and vote yes


http://www.cp24.com/

Together 4 Tamils


Canadian Border officials and police stand the deck of the MV Sun Sea (C) as it is guided into Canadian Forces Base Esquimalt with an estimated 490 suspected Tamil migrants on board in Colwood, B.C. on Vancouver Island Aug. 13, 2010.

Please go to this website and vote yes. It is about the 500 TAMILS who arrived in Canada. The poll is very important. Please vote yes and save these peoples lives

The Globe and Mail: Sri Lanka seeks deal to share intelligence on migrants
Toronto Star: Ottawa balks at public detention hearings for Tamils
CBC: Tamil migrants: 'We are not terrorists'
CTV News: 'Have faith in us,' Tamil migrants write
Toronto Sun: Cops using Interpol to identify Tamil migrants
National Post: Tamil migrants say they are fleeing mass murders
AFP: Authorities probe funding for Tamil refugees' travel
Canadian Press: One Tamil migrant died at sea: RCMP
Rabble :Canada's treatment of the Tamil refugees is a defining moment
The Montreal Gazette: RCMP confirm man died on migrant boat
Times Colonist: Tamil migrants claim they were fleeing mass murders in Sri Lanka
Montreal Gazette: Hearings start Monday for asylum-seekers
Al Jazeera: Canada probes Tamil smuggling claim
London Free Press: Waiting and hoping
News 1130: Migrants deny any links with terrorists
Medicine Hat News: Mounties still probing last year's Tamil ship as new arrivals hit shore
Toronto Star:Tamil asylum-seekers spark Canadian vitriol, anger
AFP: Tamil on ship bound for Canada died at sea: Tamil Congress
The Star: RCMP confirm death of Tamil man aboard migrant ship

Saturday, August 14, 2010

அவசர அறிவித்தல் - கனேடியத் தமிழர் பேரவை



இலங்கையிலிருந்து அகதிகளாக கப்பல் மூலமாக பயணித்த எமது உறவுகள் இன்று காலை விக்டோரியா துறைமுகத்தினை சென்றடைந்துள்ளனர். அவர்களுக்கான மனிதாபிமானப் பணிகளை, கனேடிய தமிழர் பேரவையின் உறுப்பினர்களும், தொண்டர்களும் வன்குவரில் நிலைகொண்டு முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் தாயக உறவுகளுக்கான தேவைகள் அதிகம் இருப்பதனால், மனிதாபிமான ரீதியில் உதவுவதற்கு கனேடிய உறவுகளின் ஒத்துழைப்பினை கனேடியத் தமிழர் பேரவை எதிர்பார்த்து நிற்கின்றது. குறிப்பாக வன்குவரில் வாழும் எமது உறவுகளின் ஆதரவு உடனடித் தேவையாக உள்ளது.

மேலதிக விபரங்களுக்கு
[ 416] 240 -0078

உடன் தொடர்பு கொள்ளவும்.

சன் சீ கப்பல் பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை சென்றடைந்துள்ளது

சுமார் 490 இலங்கை அகதிகளை ஏற்றிய எம் வி சண் சீ கப்பல் தற்போது பிரிட்டிஸ் கொலம்பியா கடற்பரப்பை அடைந்துள்ளதாக கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன.



கனேடிய பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் ரோவிஸ் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.

இந்த கப்பல் நேற்று காலை அந்த நாட்டில் கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் கனேடிய அரசாங்க அதிகாரிகளின் தகவல்படி கப்பல் நேற்று மாலையளவிலேயே கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் பெண்களும் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், கப்பலில் உள்ள ஒருவர் மாத்திரம் சுகவீனமுற்றுள்ளதாகவும் முன்னர் வெளியான தகவலை போன்று எவரும் மரணமாகவில்லை என்றும் கனேடிய எல்லைப்பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சன் சீ கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை செய்துள்ளது.

இதற்காக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வன்கூவருக்கு சென்றுள்ளனர்.

இந்தநிலையில் ஆர்வமுள்ள உறவுகள் கனடியத் தமிழர் பேரவையுடன்
416 240 0078
416 240 0078
உடன் தொடர்பு கொண்டு மனித நேயப் பணிகளில் ஈடுபடலாம் என தமிழர் பேரவை அறிவித்துள்ளது

Friday, August 13, 2010

லண்டனில் நாளை (14-8-2010) செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு.

செஞ்சோலை படுகொலையின் நான்காம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும், மலர் வணக்கமும் லண்டனில் நாளை 14-08-2010 அன்று நடைபெறவுள்ளது.

2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வன்னிப்பெரு நிலப்பரப்பில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தினுள் சிங்கள இனவெறி அரசின் போர் விமானங்கள் கண்மூடித்தனமாக நடாத்திய விமானக் குண்டுவீச்சில் கொடூரமாக கொல்லப்பட்ட 61 சிறுவர்களின் நினைவுநாளான அதே நாளான நாளை சனிக்கிழமை இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெறவுள்ளது.



லண்டன் ரூட்டிங் அம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவு தூபி, மற்றும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற வுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ள இந்த நினைவுவணக்க நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களின் உரையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. செஞ்சோலை வளாகத்தில் கொல்லப்பட்ட 61 மாணவச்செல்வங்களுக்கும் உங்கள் உரிமை கலந்த அஞ்சலியை செலுத்தி அந்த நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு அவர்களின் தியாகங்களை பெருமைப்படுத்துவதோடு, அவர்களின் ஆத்மசாந்திக்கும் பிரார்தனை செய்யுமாறும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள இந்த நினைவு வணக்க நிகழ்வின் போது இதுவரை போரினால் கொல்லப்பட்ட மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்குமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியை உள்ளடக்கிய நினைவு ஆலயமும் திறந்துவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வு இடம்பெறும் இடம்: 180-186 UPPER TOOTING ROAD, TOOTING, LONDON, SW17 7EJ

காலம்: 14-08-2010 சனிக்கிழமை

நேரம்: மதியம் 12 மணிக்கு ஆரம்பம் (மதியம் 12 மணிமுதல் மாலை 9 மணி வரை மக்கள் இந்த மலர்வணக்கத்தில் ஈடுபடலாம்)

Wednesday, August 11, 2010

நெல்லையில் ஓவியர் புகழேந்தியின் 'போர் முகங்கள்” ஓவியக்காட்சி!

ஓவியர் புகழேந்தி தீட்டியுள்ள, முள்ளிவாய்க்கால் துயரங்களை காட்சிப்படுத்துகின்ற ஓவியங்கள், 'போர் முகங்கள்" என்ற தலைப்பிலான ஓவியக்காட்சி தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகின்றது.

சென்னை, தஞ்சையைத் தொடர்ந்து, தற்போது நெல்லையில் இக்கண்காட்சி நடக்கவுள்ளது.

நெல்லை வண்ணார்பேட்டையில் அமைந்துள்ள ஓட்டல் சகுந்தலாவில், ரோஜா ஹாலில் 13.08.2010 அன்று தொடங்கி 15.08.2010 வரை இக்கண்காட்சி நடக்கிறது.

இக்கண்காட்சியின் துவக்க விழா 13.08.2010 அன்று காலை 10 மணியளவில் நடக்கிறது.

நிகழ்வுக்கு, ம.தி.மு.க. நெல்லை மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. கே.எம்.ஏ.நிஜாம் தலைமை தாங்குகிறார். ம.தி.மு.க. நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. ப.ஆ.சரவணன், இந்தியக் கம்யு+னிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் திரு. எஸ்.சண்முகவேல், நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.சிவக்குமார், புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளர் திரு. எம்.எஸ்.செல்லப்பா, ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் மு.சுப்புரத்தினம், தமிழர் தேசிய இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ் ஈழன் ஆகியோர் தொடக்க விழாவிற்கு முன்னிலை வகிக்கின்றனர்.

கண்காட்சியைத் திறந்து வைத்து, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ சிறப்புரையாற்றுகிறார். எழுத்தாளர் தி.க.சி., பேராசிரியர் தொ.பரமசிவம், மனித உரிமை ஆர்வலர் வழக்கறிஞர் எம்.பிரட்டோ, யாதுமாகி திரு. லேனா குமார் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

ஓவியர் புகழேந்தி ஏற்புரை நிகழ்த்துகிறார்.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஓவியங்களை பார்வையாளர்கள் பார்த்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளை, திரு.டி.இரேமேஷ், வழக்கறிஞர் எம்.அரிபாலகிருஷ்ணன், மணப்படை எம்.மணி, ஆட்டோ பாலு, சேந்தி எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

---------

ழத்தில் கடந்த ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்களின் பேரவல நிகழ்வினை முன்னிறுத்தி, ஓவியர் புகழேந்தியின் ஓவியக் கண்காட்சி சென்னையில் நடைபெற்றது.

ஈழத்தின் போராட்ட வடிவங்களை 200-க்கும் மேற்பட்ட கோட்டோவியங் களால் வெளிப்படுத்திய புகழேந்தியின் கைவண்ணம், ஈழ மண்ணின் சோகங்களை நம் நெஞ்சில் தைக்கும் வண்ணம் கொண்டு வந்து நிறுத்தியது.

தமிழார்வலர்கள் பெருமளவில் கூடிய இந்நிகழ்ச்சியில் பேசிய காசி ஆனந்தன், ""போராட்டக் களத்தில் வாழ விரும்புகிற வர் ஓவியர் புகழேந்தி. போராட்டத்தால் ஓவியம் உருவாகியதா என்றால் ஓவியமே போராட்டத்தை உருவாக்கியது என சொல்லலாம். போராட்டத்தின் வலிமையை- போரின் வீச்சை தெளிவாகச் செறிவூட்டி லட்சியப் போராகச் சித்தரித்துள்ளார். கடந்த 33 ஆண்டுகளில் இரண்டு லட்சம் தமிழர்கள் இலங்கையில் பலியாகியிருக்கிறார்கள். இறுதிக் கட்டப் போரில் கைதான தமிழ் இளைஞர்களை சிங்களச் சிறைக்கைதிகள் சிறுநீர் கழித்து வரவேற்றார் களாம்.

1833-ல் ஒன்றுபட்ட இலங்கை உருவானது. 26,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தமிழர்கள் வாழும் பகுதியாக இருந்தது. கடந்த 27 ஆண்டுகளில் 7,500, 15,000 சதுர கிலோ மீட்டர்கள் என நிலப்பரப்பை இழந்துள்ளனர். கடந்த போர்களில் பத்தாயிரம் தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டுப் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர். உலகில் வேறெங்கும் இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்ததில்லை. இரண்டு லட்சம் வீடுகள் குண்டுகள் துளைத்து சேதமடைந்துள்ளன. இத்தகைய கொடுமை களை நம்முன் கொண்டு நிறுத்தியுள்ள ஓவியர் இவர் ஒருவரே என்றுகூட சொல்லலாம்'' என்றார்.

சி.பி.ஐ. மகேந்திரன் பேசுகையில், ""வாழ்க்கை முழுவதும் அடக்குமுறையால் சிதைக்கப் பட்டவர்களின் துயரத்தை உணர்வுப்பூர்வமாகச் சித்தரிக்கின்றன புகழேந்தியின் ஓவியங்கள்! எந்தக் காலத்திலும் இந்தப் போர் மறைந்து விடாது! போராட்ட வடிவம் மாறும்; வெற்றி பெறும்.

இரண்டாம் உலகப்போர் மாபெரும் கலைஞர்களை- படைப் பாளர்களை உருவாக்கி இருக்கிறது. அழிவு என்பது மனித குலத்தின் விடுதலையைச் சாத்தியப்படுத்தியது. ஈழப்போராட்டத்தில் முள்ளிவாய்க்கால் முனை போராட்டம் மிகப் பெரியது. அதன் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. ஐ.நா. சபை முன்னின்று தமிழகத் தின் உதவியோடு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்துக்கு எத்தகைய முன்கை எடுக்க வேண்டுமோ, அதனைச் செய்வது மத்திய- மாநில அரசுகளின் பொறுப்பாகும்'' என்றார்.

அய்யாநாதன் (பத்திரிகை யாளர்), ""இந்த ஓவியங்கள் முற்றுப் பெறாமல் தொடரும். ஈழத் தமிழர்களின் வாக்குமூலங் கள் இவை. அங்குள்ள மக்களின் உண்மை நிலையை இன்னும் நமது ஊடகங்கள் சரியாக வெளிச்சமிட்டுக் காட்ட வில்லை. அங்கு நடந்த படுகொலைகளை ஓவியமாக மட்டும் அல்லாமல் தன் பயண அனுபவத்தின் மூலம் படைப்பு களாகவும் படைத்திருக்கிறார் புகழேந்தி.

சிங்களப் பேரினவாதத்தின் போக்குகளை எதிர்க்க இந்திய அரசுக்குத் துணிவில்லை. அதற்குத் துணை போகிறது. இந்தியாவின் பொய் முகத்தை- முகங்களை அடையாளம் காட்டி மக்கள்முன் கொண்டு நிறுத்த வேண்டும். ஈழத்தின் வரலாற்றை, ஈழ மக்களின் சொல்லொணா துயரங்களைப் பதிவு செய்திருக் கிறார் புகழேந்தி. ஓர் இனத்தின் வரலாற்று ஆவணம் இது'' என்றார்.



இயக்குநர் பாலுமகேந்திரா, ""என்னால் இப்போதெல்லாம் பேச முடியவில்லை. ஈழத்தின் துயரம் என்னை அழச்செய்து விடுகிறது. ஈழ மக்களுக்கு எதிரான அராஜக மும் அட்டூழியமும் ஞாபகத்து வந்து பேச முடியாமல் திணற வேண்டியிருக்கிறது.

நவீன வண்ணமயமான உலகில், கருப்பு- வெள்ளைக் கோடுகள் யதார்த்தமாக நம்முன் நின்று பேசுகின்றன. மனிதத்தின் அழுத்தம் வண்ணங்களில் வெளிப் படுவதில்லை. உலக உருண்டை யில் தமிழ்நாடு என்று ஒன்று குறிக்கப்படுமானால், அது ஈழமாகத்தான் இருக்கும். இத்தகைய ஈழ மண்ணின் துயரங்களை என் வாழ் நாளுக்குள் திரைப்படங் களாகக் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது'' என்றார்.

இயக்குநர்- நடிகர் மணிவண்ணன், ""மூன்று திட்டங்களின் மூலம் செயல்பட்டாலே அம்மக் களுக்கு நாம் உதவி செய்தவர் களாவோம். நீண்ட கால வளர்ச் சிக் கண்ணோட்டத்தில் தமிழ் அரசு உருவாக முன்கை எடுக்க வேண்டும். இரண்டாவதாக புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் தம் சொந்த இடங்களில் வாழ உத்தரவாதமளித்து, அவர்களின் வாழ்க்கைக்கான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். சிறையில் அடைக் கப்பட்டுள்ள அனைத்து தமிழ் இளைஞர்களையும் விடுதலை செய்து, அவர்கள் வாழ்வுரிமைக் கான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். இதனை மேற்கொண்டாலே ஈழ மக்கள் பலன் பெறுவர்.

தமிழர்கள் எங்கே வாழ்ந் தோம், எங்கே வீழ்ந்தோம் என்பதை அறியாதவர்கள். தமிழர் களுக்கு எதிரான அரசு ஒன்று உண்டு என்றால், அது தமிழக அரசுதான்'' என்றார்.

சீமான், ""இந்த ஓவியங்கள் கற்பனை அல்ல. களத்தில் நின்று போராடி வீர மரண மடைந்த மாவீரர்களின் படங்கள்! காலம்கால மாக பல புரட்சிகளைப் பேச வைத்தவை ஓவியங்களே.

ஈழத்தமிழ்ப் போராளி களுடன் பகிர்ந்து கொள் ளும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த அனுபவங்கள் தமிழ் மக்களின் விடுத லைக்கான உணர்வை ஏற்படுத்தின. தமிழ் தேசத்துக்கான விடுதலை என்ற பதாகையை ஏந்தி விட்டோம். அதற்கான போராட்டத்தைத் தொடர்ந்து மேற் கொள்ள வேண்டும்'' என்றார்.

மணியரசன் (தமிழ் தேசிய பொது வுடைமைக் கட்சி), ""ஓவிய உலகில் இது புதிய பாய்ச்சல். ஓராண்டாக முயன்று தமிழ் மக்களை எழுதியுள்ளார். பார்த்தவர்கள் மனத்தில் துன்பம் பற்றிக் கொள்ளும் வகையில் தீட்டி இருக்கிறார். முள்ளி வாய்க்கால் முகங்கள் தமிழரின் பிரதிபிம்பம். ஆற்றாது அழுத கண்ணீர் புலப்படுகிறது. உண்மையான சமாதானப் புறாக்களை நேரு குடும்பம் குத்திக் கிழித்துள்ளது.

இவர்தம் படைப்புகளில் தமிழகத்துப் போராட்டங்களையும் காட்சிப்படுத்த வேண்டும். அப்போது தமிழகத்தின் உண்மை முகங்கள் நம்முன் தெரியும்'' என்றார்.

ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த ஓவியக் கண்காட்சியில் ஈழத் தமிழர்களின் சோக முகங்களை- அவர்களுக்கெதிரான அடக்கு முறைகளைப் பலர் கண்டு மனம் வெதும்பினர்.

-கோ. எழில்முத்து

Saturday, August 07, 2010

தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான கனடியத் தமிழ் மக்கள் கலந்துரையாடல்



DATE: Monday, August 9th, 2010

TIME: 6 pm to 9 pm

LOCATION: Hart House - Music Room, University of Toronto,

7 Hart House Circle, Toronto, ON

For media inquiries, please contact:
David Poopalapillai, david@canadiantamilcongress.ca or
Manjula Selvarajah, manjulas@canadiantamilcongress.ca.

For general inquiries, please reach the Canadian Tamil Congress at
416.240.0078.

--------------------

தமிழ் அகதிகளை வரவேற்பதற்கான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருக்கும் கனடியத் தமிழ் மக்கள்

200க்கும் அதிகமான தமிழ் அகதிகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பழிவாங்கல் நடவடிக்கையில் இருந்து தப்பி ஓடுகின்றனர்.

ஜனநாயக முறைப்படி கனடாவாழ் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட கனடியத் தமிழ் தேசிய அவை உறுப்பினர்களும் பல கனடியத் தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கப்பலில் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு உதவி செய்வது தொடர்பாக 2010ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதி ஒரு கலந்துரையாடலை நடத்தினர்.

அந்த நிகழ்ச்சியின் போது சட்டத்தரணியும், குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான விடயங்களில் நிபுணருமான லோர் வோல்மன் சில மாதங்களுக்கு முன்னர் கடல்மார்க்கமாக வன்கூவரில் வந்து இறங்கிய 76 தமிழ் அகதிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விபரங்களை எடுத்து விளக்கினார்.

அத்துடன் கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும், பெண்கள் குழந்தைகள் உட்பட, 200 அகதிகள் தொடர்பான நடவடிக்கைகளை தாமதிக்காமல் ஆர்ம்பிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் விளக்கிக் கூறினார்.

“கனடாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் தமிழ் அகதிகளுக்கு வழங்க வேண்டிய உடனடி உதவிகள் தொடர்பாக வன்கூவரில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். இந்த அகதிகளின் நிலைமையை வளக்கும் ஆவணங்களையும் நாம் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம்,” என கனடியத் தமிழ் தேசிய அவையின் பேச்சாளரான கிருஷ்ணா சரவணமுத்து கூறினார்.

இந்த அகதிகளுக்கு உடனடியான உதவிகளை வழங்குவதற்கு கனடியத் தமிழர் தேசிய அவை வேறு பல தமிழ் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுகின்றார்கள். நடைபெற்ற கலந்துரையாடலின் போது சட்ட ஒழுங்குகளைச் செய்வதற்கும், ஊடகத் தொடர்புகளை மேற்கொள்வதற்கும், குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், சமூகத் தொடர்புகளை மேற்கொள்வதற்குமாக பல உபகுழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன.

“கனடிய தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுக்கும் சகல சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் நாம் மதிப்பளிக்கும் அதே வேளை வந்துகொண்டிருக்கும் தமிழ் அகதிகளின் பிரச்சினையை மனிதநேயத்துடன் நோக்குமாறு கனடிய அரசாங்கத்தைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,” என தேசிய அவையின் தலைவர் மோகன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

--------------------------

அகதிகளுடன் செல்லும் கப்பல் வன்கூவர் நோக்கி செல்கின்றது: அமெரிக்கா

சிறீலங்கா தமிழ் மக்களை ஏற்றிக்கொண்டு வரும் கப்பல் வன்கூவர் பகுதியை நோக்கி செல்வதாக அமெரிக்காவின் வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

எம்.வி சன் சீ எனப்படும் கப்பல் முன்னர் எம் வி ஹரின் பனிச்-19 என்ற பெயரை கொண்டிருந்தது (படத்தில் உள்ளது). அது தற்போது 200 தமிழ் மக்களை ஏற்றிக்கொண்டு கனடாவை நோக்கி செல்கின்றது என வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்த கப்பல் தொடர்பில் எமக்கு அதிக தகவல்கள் தெரியாது, ஆனால் அது கனடாவின் வன்கூவர் பகுதியை நோக்கி செல்லலாம் என அமெரிக்கா வெளிவிவகார திணைக்களத்தின் பேச்சாளர் பிலிப் ஜே குறொலி தெரிவித்துள்ளார்.

தாய்லாந்து நாட்டு கொடியுடன் செல்லும் இந்த கப்பலை அமெரிக்காவின் கரையோர காவல்படையினர் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சில மாதங்களாக கடலில் பயணம் செய்யும் இந்த கப்பல் எதிர்வரும் வாரத்தின் முற்பகுதியில் பிரிட்டிஸ் கொலம்பியாவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

--------------------------------------
AUGUST 9TH FORUM ON TAMIL ASYLUM SEEKERS OF CARGO SHIP MV SUN SEA

Toronto, August 6, 2010 - As reports of another boat containing Tamil refugees spread, so does the hysteria around their admissibility, and the means by which they arrive in Canada. Sparked by Sri Lankan government sources, and its intelligence apparatus, these innuendos effectively seek to discredit the would be refugees of their rights to a fair hearing, before they arrive ashore. This time around, there is increasing pressure from Sri Lankan sources to intercept the ship.

As an example, such sources have suggested that our government send it’s military to “thwart threats to Canada”, with the implication that the boatload of refugees are a threat to Canada with little regard for the validity of individual cases. Similar statements made by the same sources with regards to the 76 Tamil asylum seekers who arrived on the Ocean Lady in October 2009 were investigated by Canadian authorities, and no evidence found to that effect.

The Canadian government response to the arrival of the Ocean Lady in October 2009 offers some insight as to how it may respond to this migrant ship: following due process, assessing each case individually, accepting valid cases and rejecting anyone who is seen as a threat to Canadian security.

The Canadian Tamil Congress is organizing an urgent forum to directly address this issue and discuss Canada’s role in protecting refugees. In particular, we will hear from Canadian organizations, and politicians on the Canadian response to these refugees. We will also have on hand asylum seekers from the Ocean Lady who arrived in October 2009 and members of the community who themselves were refugees.

DATE: Monday, August 9th, 2010

TIME: 6 pm to 9 pm

LOCATION: Hart House - Music Room, University of Toronto,

7 Hart House Circle, Toronto, ON

For media inquiries, please contact:
David Poopalapillai, david@canadiantamilcongress.ca or
Manjula Selvarajah, manjulas@canadiantamilcongress.ca.

For general inquiries, please reach the Canadian Tamil Congress at
416.240.0078.

Blog Archive