Saturday, December 11, 2010

போராளி-பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம்

-தமிழினப் படுகொலையும் வெளியாகும் ஆதாரங்களும்
New information on the Sri Lanka war crimes video: victim could be Isaipriya

சனவரி 9 , 2011 சென்னை
மே பதினேழு இயக்கம்

வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன 'ஓடி வரும் அந்த சிறுமியின் புகைப்படம்' (கிம் சுக்) உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த,போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த பிறகும் அந்த சிறுமி இன்று வரை நம்முடன் உயிரோடு தான் இருக்கிறார். போரின் கொடுமையை தமிழினம் உரத்து கொடுத்த போது திரும்பி பார்க்காத சமூகம் இன்று வெளியாகும் காணோளிகளால் விழிப்படைந்து பார்க்கும் சமயம், அங்கு காப்பாற்ற மக்களும் இல்லை, பச்சைபடுகொலையை உணர்த்திய இசைபிரியாக்களும் இல்லை. பிணமாய் நாமும், படங்களை அவர்களும் துயரப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இசைபிரியாவையும் ஏனைய போராளிகளையும் பார்த்த உலக சமூகம் இப்போது நிர்வாணமாய் நிற்கிறது. துயரப்படங்களையும் துரோகத்தையும் பார்த்து பார்த்து பழகிவிட்ட சமூகமாய் தமிழ் சமூகம் நிற்கிறது.

இறுதி வரை சமரசம் செய்யாத போராளிகளாய் நின்றவர்களுக்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, இசைபிரியாவை கொலை செய்ய துணை போன சமூகத்தை கேள்வி கேட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.

மே 17 , 18 படுகொலை நடந்த ஒரு வாரத்தில் அங்கு சென்று பார்வை இட்ட ஐ. நா தலைவர், அந்த ஒரு வாரத்தில் உதவி தொகையை அளித்த இந்திய சோனியா அரசு, ஐ. நா வில் வர இருந்த இலங்கை மீதான விசாரணை தீர்மானத்தை தடுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள், மத்திய மந்திரி பதவி ஒதுக்கீட்டில் தமிழர்களை மறந்த தி.மு.க மற்றும் தோல்வியில் தூங்கி போன கட்சிகள் என அனைவரின் முன்னிலயில் தான் இசைபிரியா கொல்லப்பட்டார்.

இங்கு இசைபிரியா என்பவர் ஒரு தனி நபர் அல்ல, உலக சமூகத்தால் ஒரு மிருகத்தின் வாயில் தனித்து, கைகள் கட்டப்பட்ட நிலையில், வேட்டையாட விடப்பட்ட தமிழீழ சமூகமே.

போருக்கு பிறகு அமைதியை காத்த தமிழக தமிழர்களும் இந்த குற்ற சாட்டுக்கு விலக்கானவர்கள் அல்ல. நம் கண் முன்னால் தான், நம்மின் மௌனத்தின் மீதுதான் இந்த பச்சை படுகொலைகள் நடந்தன. போருக்கு பிறகு எழுச்சி பெற்று இருக்க வேண்டிய சமூகம் அவ்வாறு தனது கடமையை செய்யாமல் போனதன் சாட்சி தான் இசை பிரியாக்கள்.
தான் பெற்ற 6 மாத குழந்தையை போரில் பறிகொடுத்த பிறகும் உறுதியாய் இறுதி வரை எதிரியை எதிர்கொண்ட அந்த மாமனித போராளிக்கு வீரவணக்கம் செலுத்துவதில் இருந்து நமது உத்வேகமுற்ற போராட்டத்தை ஆரம்பிப்போம்.

போர் எதிர்ப்பு போராட்டத்தின் மையமாய் எப்படி மாவீரன் முத்துகுமரன் இருந்தாரோ, எப்படி திலீபன் இந்தியா அமைதிபடையின் எதிர்ப்பு மையமாய் மாறினாரோ அவ்வாறே போரின் பிறகான புத்துணர்வு பெரும் போராட்டத்தின் மையமாய் போராளி பத்திரிகையாளர் இசைபிரியா. இசைபிரியா சிங்கள கோரமுகத்தின் எதிர்ப்பு குறியீடு. மரணத்தின் வாயிலில் சமரசம் செய்யாத தமிழீழ போராளியின் அடையாளம், இசைபிரியாவுடன் கொள்ளப்பட்ட அனைத்து போராளிகளும் அவ்வாறானவர்களே. இசைபிரிய இந்த போராட்ட குணத்தின் அடையாளமாய் நம்முன் நிற்கிறார்.

தமிழீழபோராளிகளை, தமிழீழ மக்களை -நாம் இந்த செய்தியை படிக்கும் இதே கணத்தில்- கொல்வதற்கு அனுமதிக்கும் செயலாக நமது மௌனம் ஆக கூடாது. நாம் மறக்க கூடாதது நமது இந்த மௌனம்தான் போர் முடிந்த இரண்டு மாதம் கழித்து இந்த போராளிகள் நம் மௌனத்தை சாட்சியாய் வைத்து கொல்லப்பட்டார்கள் என்பதை.

இணைந்து பணியாற்ற அனைத்து அமைப்புகளுக்கும் பணிவான கோரிக்கை வைக்கிறோம். இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கத்திற்கு மட்டுமே சொந்தமான ஒன்றல்ல, அனைவரும் இணைந்து இந்த வீர வணக்க நிகழ்வை நிகழ்த்தி இனிவரும் போராட்டத்திற்கு ஆரம்ப புள்ளி வைப்போம்.

ஒன்று திரள்வோம்.
மே பதினேழு இயக்கம் - contact.may17@gmail.com , thiruja@yahoo.com

Thursday, December 02, 2010

போர்க்குற்றவாளி மஹிந்தாவை கைது செய்யுங்கள்: பிரித்தானிய பொலிசாரிடம் தமிழர்கள் முறைப்பாடு (காணொளி இணைப்பு)

பிரித்தானியாவில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையம் சென்று போர்க்குற்றவாளி மஹிந்தராஜபக்ஷவை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

லண்டனில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று மகிந்தவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.



இம் முறைப்பாடுகளுக்கு பொலிசால் எதுவும் செய்யமுடியாமல் போனாலும், மக்கள் கொடுக்கும் முறைப்பாடுகளை அவர்கள் கட்டாயம் பதிந்து அதற்கான குற்ற இலக்கத்தை வழங்கவேண்டும்.

எனவே தமிழர்கள் அனைவரும் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு குற்ற இலக்கத்தை எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது இலங்கையின் தலைமை அமைச்சர் என்ற பதவியில் அவர் இருப்பதால் பிரித்தானியா அவரைக் கைதுசெய்யவில்லை.

ஆனால் அவர் அப்பதவியில் இருந்து இறங்கும் தறுவாயில் அவரைக் கைதுசெய்யும் உரிமை பிரித்தானிய சட்டத்தில் உள்ளது.

மற்றும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாழியைக் கண்டு பிடிக்கவில்லை என்றால் பிரித்தானியப் பொலிசார் அந்த வழக்கை மூடப்போவது இல்லை. அது தொடர்ந்தும் திறந்த ஒரு வழக்காகவே இருக்கும்.

இக் காரணத்தால் மகிந்த பிரித்தானியா பக்கம் தலைவைத்தே படுக்கமுடியாத நிலை தோன்றலாம். எனவே பொதுமக்கள் விரைந்து செயல்படுங்கள். நீங்கள் கொடுத்த வாக்குமூலத்தை பொலிசார் பிரதியாக எடுத்து உங்களிடம் தருவார்கள். அதனை பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்களிடம் கையளியுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

மக்களே தாமதிக்காமல் இன் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். உடனடியாக முறைப்பாடுகளை மேற்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் முறைப்பாடுகள் குவியும் காலகட்டத்தில், பிரித்தானிய சட்ட அமைச்சின் உதவிகளை நாட ஏற்பாட்டாளர்கள் முனைகின்றனர்.

Wednesday, December 01, 2010

மஹிந்த தங்கி நிற்கும் விடுதி முன் ஆர்ப்பாட்டம்

Now Killer rajapaksa Demo is Moved To Dorchester Hotel London Park Lane W1A 2HJ



தமிழர்களை அழித்து ஒழித்த கொலைகார இலங்கை கிட்லர் மகிந்தா அவரது படை பட்டாளங்களுடன் ஆடம்பர விடுதியில். தங்கி நின்று கும்மாளம் .முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் சாவல் விட்டு மக்களின் ஆர்ப்பாட்டத்தை ஜன்னல் வழியாக பார்வை இட்டு கொண்டுள்ளாராம் ./


கொட்டும் அடர் பனி மழைக்குள்ளும் கடும் குளிரில் நடுங்கிய படி மக்கள் அங்கும் ஆர்ப்பாட்ட போர்க்கொடியை நடத்திய வண்ணம் உள்ளனர் .

நீங்களும் இன்றே சென்று கலந்து கொள்ள கீழ் வரும் முகவரிக்கு விரைந்து செல்லுங்கள்.

கொடுங்கோலன் மஹிந்த தங்கி நிற்கும் விடுதி முகவரி மற்றும் நம்பர் இங்கே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் இருக்கிறார்கள்.


தொலைபேசி இலக்கம். 00442076298888

DORCHESTER HOTEL

MAYFAIR ,PARK LANE

LONDON W1K 1QA.

போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு :

North West Transport arrangement, All coaches Leave at 3pm:-

Harrow: Ashely cash& carry, Abi diamond, Rooks Heath School.

Sothall: Tamilini cash & carry, Lady Margaret halal meat, Goldman Estate.

Hayes: Tamilan cash & carry.

Wembley: In front of Alperton underground station.

Colindale: Thirupathai cost cutter, Royal Food & Wine.

Watford: St Albans Road.

More info: 075 7268 0443

மேலதிக பேரூந்துகள் விடப்பட இருப்பதால் உங்கள் அருகில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்புகொள்ளுங்கள்.

ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து கனடியத் தமிழர் நடாத்தும் கண்டன ஒன்றுகூடல்

போர் குற்றவாளி ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து பிரித்தானியா வாழ் எமது உறவுகள், தொடர் போராட்டங்களை அங்கு நடாத்தி வருகின்றனர்.

அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், டிசம்பர் 2ஆம் நாள் வியாழக்கிழமை, முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை ரோரன்ரோ, மொன்றியல் நகரங்களில் அமைந்துள்ள பிரித்தானிய துணைத்தூதரங்களுக்கு முன்னர் கண்டன ஒன்றுகூடல் ஒன்று கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


இடம்: 777 Bay Street, Toronto (Bay & College) Subway : College

1000 De La Gauchetière St. W. Montreal.

காலம்: முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை
பெருமளவில் கலந்து எமது உணர்வை வெளிப்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
416 646 7624

ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்கான வாகன ஒழுங்கு விபரங்கள்

நாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது.

PROTEST AGAINST WAR CRIMINAL RAJAPAKSE AT OXFORD UNION

FREWIN COURT,

OXFORD,

OX1 3JB,

DATE/ tHURSDAY 2nd DEC,

4 PM

நாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு :

North West Transport arrangement, All coaches Leave at 3pm:-

Harrow: Ashely cash& carry, Abi diamond, Rooks Heath School.

Sothall: Tamilini cash & carry, Lady Margaret halal meat, Goldman Estate.

Hayes: Tamilan cash & carry.

Wembley: In front of Alperton underground station.

Colindale: Thirupathai cost cutter, Royal Food & Wine.

Watford: St Albans Road.

More info: 075 7268 0443

மேலதிக பேரூந்துகள் விடப்பட இருப்பதால் உங்கள் அருகில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்புகொள்ளுங்கள்.

Monday, November 29, 2010

மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வருகை – எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு

தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார்.

ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற சந்தேக நபர்களை பிரித்தானியாவின் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என எழுந்த அச்சம் காரணமாக அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது.

எப்படியாயினும், சட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து அதில் தங்கியிருக்கவோ அல்லது திருப்தியடையவோ முடியாது. அதனால் பிரித்தானிய தமிழர்களும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்களும் ராஜபக்சவின் வருகை மற்றும் ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்ற அனுமதித்ததற்கு எதிராக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

மகிந்த ராஜபக்ச கடந்த 2008ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழக சங்கத்தினர் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு திரட்டும் தளமாகவும், படை நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையிலும் அந்த மேடையைப் பாவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு தோற்றுப் போக நேர்ந்தால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகின் தோல்வியாக முடியும் எனவும், சனநாயகம் தோற்றுப்போகும் எனவும் தனதுரையில் கூறிய மகிந்த, தாம் முன்னெடுத்த போருக்கு ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் சபை சிறீலங்கா அரசைக் கண்டித்த பின்னர்கூட, தாம் ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு உட்பட பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும், பன்னாட்டு சட்டத்தை மதித்து நடப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.

இவ்வாறான பின்புலத்தில் மனித உரிமைகளை மதிக்காது நடந்து வருவது மட்டுமன்றி, தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது.

போரினால் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைத்து, மனித உரிமைகளை மதிக்காது தொடர்ந்தும் செயற்பட்டு வருவதுடன், கருத்து வெளிபாட்டு சுதந்திரத்தை மறுதலித்துவரும் ராஜபக்சவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவ சமூகத்தினர் ஆகியோரை அணுகி, உயர்ந்த கல்விச் சமூகத்தின் முன்னிலையில் ஒரு போர்க் குற்றவாளி உரையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.
  • ஒஸ்போர்ட் பிரதேசத்தில் உங்களுக்கு தொடர்புகள் இருந்தால் அவர்கள் மூலம் சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலத்திற்குக் கொண்டு வாருங்கள்.
  • எதிர்வரும் 2ஆம் நாள் மகிந்த ராஜபக்சவிற்கு ஒஸ்போர்டில் எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவையினால் எடுக்கப்படும் நடவடிக்கையில் உங்களையும் தவறாது இணைத்துக் கொள்ளுங்கள். (இது பற்றிய விபரங்கள் பின்னர் பகிரப்படும்)
  • உங்களின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி, போர்க் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தச் செய்யவும்.

இனவெறியன் மகிந்தவின் வருகையை எதிர்த்து லண்டன் விமான நிலையத்தில் இன்று திடீர் போராட்டம் அறிவிப்பு!

இன்று இலங்கையில் இருந்து UL 509 என்ற இலக்கமுடைய ஏர் லங்கா விமானத்தில் மகிந்த லண்டன் நோக்கிப் புறப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமான செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் இன்று இரவு சுமார் 10.00 மணிக்கு டேர்மினல் – 4 கிற்கு வந்தடையவுள்ளார். அவர் விமானநிலையத்துக்கு வரும்போது தமிழர்கள் தமது எதிர்ப்பைக் காண்பிக்க இன்று திடீர் போராட்டம் ஒன்று நடக்கவுள்ளது. இப் போராட்டத்துக்கான அழைப்பை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒன்றாக விடுத்துள்ளன. பிரித்தானிய மண்ணில் காலடி எடுத்துவைக்கும் மகிந்தவுக்கு முதல் எதிர்ப்பைக் காட்ட தமிழர்கள் உடனடியாக ஒன்று திரளுமாறு வேண்டப்படுகின்றனர்.


இன்று இரவு 10 மணிக்கு லண்டன் ஹீத்துரு விமானநிலையத்தில் உள்ள டேர்மினல் 4 இற்கு மக்களை உடனே அணி திரளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர். கறுப்பு உடைகளை அணிந்தும், கறுப்புக்கொடிகளை சுமந்தவாறும் இப் போராட்டம் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இனப்படுகொலை புரிந்து, பல்லாயிரம் தமிழர்களின் உயிரைக் குடித்த மகிந்த லண்டன் வருவதை தற்போது சட்டரீதியாக தடுக்கமுடியாத நிலை தோன்றியுள்ளது. ஒரு நாட்டின் தலைவர் என்ற ரீதியில் அவரைக் கைதுசெய்ய இயலாது என்று பிரித்தானிய யூரிகள் அடங்கிய சபை விளக்கம் கொடுத்துள்ள நிலையில், இறுமாப்போடு பிரித்தானிய வரும் மகிந்தவுக்கு தகுந்த விதத்தில் கரி பூச மக்கள் ஒன்றுபடவேண்டும்.

பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மக்கள் தமது எதிர்ப்பை அரசியல் ரீதியாகக் காண்பிக்கவேண்டும். இன்று போராட்டத்திற்கு வரும் மக்கள் தமது எதிர்ப்பை சாத்வீகமுறையில் தெரிவிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அத்தோடு குளிர் அதிகமாக உள்ள காரணத்தால் அதற்கேற்ற உடைகளையும் அணிந்துவருமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.

தமிழினப் படுகொலையின் சூத்திரதாரியும், போர்க்குற்றவா‏ளியுமான மகிந்தவை பிரித்தானியாவில் கைது செய்வதற்கு நீங்கள் செய்யவேண்டியவை

இலங்கையில் பல்லாயிரக் கணக்கில் தமிழ்மக்களை படுகொலை செய்தும், போர்க்கைதிகளை சர்வதேச விதிகளுக்கு முரணாக சித்திரவதை செய்து படுகொலை செய்தும்,

தமிழின வரலாற்றுச் சான்றுகளை அழித்து தமிழர்கள் நிலம் என்பதை அடையாளம் இன்றி அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதுமான சிங்கள பேரினவாத அரசாங்கத்தை தலைமையேற்று கொடுங்கோல் ஆட்சி நடாத்திவரும் இலங்கையின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச அவர்கள் இன்று பிரித்தானியா வரவுள்ளதாலும், அவர் எதிர்வரும் 02-12-2010 அன்று ஒக்ஸ்பேட் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற உள்ளதுமானது தடுக்கப் படவேண்டிய விடையமாகவும், அதே சமயம் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரித்தானிய சட்டங்களுக்கு அமைவாக அவரை கைது செய்யும் நடவடிக்கையையும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இலங்கையின் தமிழர்தாயகப் பகுதிகளில் தொடர்ந்துவரும் இனப்படுகொலைகள், பாலியல் பலாத்காரங்கள், என்பவற்றால் பலாயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை தடுக்கக் கோரியும், இலங்கை அரசை தண்டிக்க கோரியும் உலகெங்கும் தமிழ்மக்கள் வீதிகளிலும், அரச செயலகங்களின் முன்பாகவும் பல ஆர்ப்பாட்டங்களை லட்சக்கணக்கில் திரண்டு நடாத்தியிருந்தாலும் அவை எல்லாவற்றிற்கும் பலன் கிடைக்கக் கூடியதாக இச்சந்தர்ப்பம் அமைவதாலும், கடந்த இயரண்டுவாரங்களின் முன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் அவர்கள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டால் மகிந்த கைதுசெய்யப்படுவதை தம்மால் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்திருந்ததை நினைவில் கொண்டு உடனடியாக இந்த நடவடிக்கையில் உலகத் தமிழர்கள் இறங்க வேண்டும்.

எனவே உடனடியாக செய்யவேண்டிய வேலையாக கீழுள்ள லிங்கை அழுத்தி அதனூடாக உங்கள் முறைப்பாட்டை 300 சொற்களுக்கு அதிகமாக இல்லாமல் இலகுவாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்புங்கள்.

முறைப்பாட்டை அனுப்ப இங்கு அழுத்தவும்: http://www.fco.gov.uk/en/feedback

இன்று பிற்பகல் 9:00 மணியளவில் பிரித்தானியாவின் கீத்றூ விமானநிலையத்தில் மகிந்த ராஜபக்ச வந்திறங்கவுள்ளார் என்பதையும் அறியத் தருகிறோம்.

அத்தோடு இவை எல்லாவற்றையும் மீறி 2 ஆம் திகதி அவர் ஒக்ஸ்பேட் பல்கலைக்கழ்கத்தில் உரை நடாத்தும் பட்சத்தில் அதை எங்கும் பல்லாயிரக்கணக்கில் பிரித்தானிய தமிழர்கள் கூடவேண்டியதும் அவசியமாகிறது என்பதையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
மின்னஞ்சல் அனுப்பமுடிந்தவர்கள் கீழ்காணும் மின்னஞ்சலூடாகவும் உங்கள் கோரிக்கைகளையும், உங்களிற்கு மகிந்த ஆட்சியால் ஏற்பட்ட பாதிப்புக்களையும் எழுதிஉஅனுப்புங்கள். Proctors.office@admin.oxac.ukஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் இணையத்தள முகவரி: http://www.fco.gov.uk/en/

Friday, November 26, 2010

ரொறன்ரோவில் மாபெரும் எழுச்சியுடன் மாவீரர் நாள்: ஒரே நாளில் நான்கு நிகழ்வுகள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKXxPWQm_4xRSPcDg8-12L1-glEvq0Z7rc3dn-JFpPh6OsQ1TY1CnUzNviUDas-SyFt8qFnODlAjELXiQ76NdQceFwM2oXD1Vdw-MD84zy_oe0sZ-vmShvvyHDVhVUKynU73oRf00ip_-b/s1600/maaveerar+day+2010.jpg

மாவீரர் நாள் 2010 கனடா

நவம்பர் 27, 2010 -சனிக்கிழமை

ரொறன்ரொவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற ஏற்பாடாகி வருகிறது. ரோறன்ரோவிற்கு வடக்கே அமைந்துள்ள மார்க்கம் நகரில் உள்ள பிரசித்திபெற்ற ‘மார்க்கம் பெயர் கிறவுன்ரில் Markham Fair Grounds) இல் நடைபெறவுள்ளது.

இங்கு மாவீரர்நாளுக்கென விசேடமாக உள்ளரங்கொன்று அமைக்கப்பட்டுள்ளது. இவ்வரங்கு குளிர்காலத்துக்கேற்றவாறு சூடேற்றப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோரை உள்வாங்கக்கூடியதுமாகும்; அத்துடன் மக்கள் மலர் வணக்கம் செய்வதற்கான மாவீரர் துயிலும் இல்லமும் இங்கு அழகாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்கென பிறிதான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது..

இவ் மாபெரும் உள்ளரங்கில் நவம்பர் 27ம் நாள் நான்கு நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர் 1ஆம் நிகழ்வு காலை 6.30 மணிக்கும் 2ஆம் நிகழ்வு மதியம் 12.00 மணிக்கும் 3ஆம் நிகழ்வு மாலை 03.00 மணிக்கும் 4ஆம் நிகழ்வு மாலை 06.00 மணிக்கும் ஒழுங்கு செய்துள்ளனர்

மாவீரர்நாள் நிகழ்வை கனடியத்தமிழர் தேசிய நினைவெழுச்சி அகவம் ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்வு நடைபெறுவதற்காக 40’x40’ அளவைக்கொண்ட பெரிய மேடையும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

இலவச வாகனத்தரிப்பிட வசதி போதியளவு உண்டு

நான்கு நிகழ்வுகள்

1ஆம் நிகழ்வு: காலை 6.30 மணி

2ஆம் நிகழ்வு:; மதியம் 12.00 மணி

3ஆம் நிகழ்வு: மாலை 03.00 மணி

4ஆம் நிகழ்வு: மாலை 06.00 மணி

Markham Fair grounds

10801 McCowan Road
Markham, ON L3P 3J3

(McCowan Road & Elgin Mills Road East)

புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் 2010 நிகழ்வுகள்

Thursday, November 25, 2010

புலம் பெயர் நாடுகளில் மாவீரர் நாள் 2010 நிகழ்வுகள்


27.11.2010: அவுஸ்திரேலியா - சிட்னி

http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20018.jpg

27.11.2010: பெல்ஜியம்

http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20016.jpg

27.11.2010: மலேசியா
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20014.jpg

27.11.2010: இத்தாலி பலர்மோ
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20012.jpg

28.11.2010: இத்தாலி மேற்பிராந்தியம்
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20010.jpg

28.11.2010: கனடா MONTERAL

http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/271010%20006.jpg

27.11.2010: நோர்வே
http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/211010%20007.jpg

28.11.2010: யேர்மனி
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20007.jpg

27.11.2010: சுவிஸ்
http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/291010%20006.jpg

27.11.2010: பிரான்ஸ்
http://www.sangathie.com/uploads/images/2010/01(nisan)/271010%20002.jpg

27.11.2010: பிரித்தானியா
http://www.sangathie.com/uploads/images/2010/11/111110%20002.jpg

மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகள்



http://www.eelamstore.com/


மாவீரர் நாள் சிறப்பு வெளியீடுகள்

Blog Archive