Tuesday, January 26, 2010

பிரித்தானிய கருத்துக்கணிப்பு வாக்களிப்பு நிலையங்களின் விபரம்

பிரித்தானியாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சுதந்திர தமிழீழ தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கான வாக்களிப்பு நிலையங்களின் விபரங்கள் வெளிவந்துள்ளன.

சுதந்திர தமிழீழ தனியரசுக்கான ஆணையை 34 ஆண்டுகளின் முன் வட்டுக்கோட்டை பிரகடனத்தின் மூலம் தெரியப்படுத்தியிருக்கும் நிலையில் அதையே இன்றும் ஒட்டுமொத்த தமிழர்களும் விரும்புகின்றனர் என்பதை மீண்டும் ஒரு முறை இந்த கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்து அந்த ஆணையை சர்வதேசத்தின் முன் வைத்து சுதந்திர தமிழீழ தனியரசை உருவாக்கும் நோக்கோடு உலகெங்கும் இக்கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் வரிசையில் எதிர் வரும் 30-01-2010 (சனிக்கிழமை) மற்றும் 31-01-2010 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பில் பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் தவறாது வாக்களித்து தமது வரலாற்றுக் கடமையை செய்ய வேண்டும் என பல அமைப்புகள், தமிழ் உணர்வாளர்கள், அரசியல் வாதிகள், போன்றோர் கோரியிருப்பது மட்டுமன்றி அரசியல் ஆய்வாளர்கள் கூட இவ்வகையான தேர்தலில் ஒட்டுமொத்த தமிழர்களும் சுதந்திர தமிழீழ தனியரசை ஆதரித்து வாக்களித்தால் அது தமிழீழம் உருவாகுவதை விரைவுபடுத்தி தமிழீழம் மலரும் என கருத்துகள் தெருவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவில் நடைபெறும் இக்கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பிற்கான வாக்களிப்பு நிலையங்கள் மக்களின் வசதி கருதி வெளியிடப்பட்டுள்ளது.

கீழே அழுத்தி விபரங்களை பெற்றுக்கொள்ளுங்கள்


"இலண்டன் வாக்குச்சாவடிகளின் விபரங்கள்"









"இலண்டன் புறநகர் வாக்குச்சாவடிகளின் விபரங்கள்"


"பிரித்தானிய தேர்தல் விதிமுறைகள்"


Blog Archive