Friday, February 12, 2010

அவுஸ்த்திரேலியாவில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்மீதான மீள் வாக்கெடுப்பு

ஈழத்தமிழர் புல்ம்பெயர்ந்து வாழும் தேசமெங்கிலும் அதிகரித்துவரும் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றுவரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான மீள்வாக்கெடுப்பூக்கள் இங்கு அவுஸ்த்திரேலியாவிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேர்தல் ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

சிட்னி, மெல்பேண், பிறிஸ்பேன், கன்பரா, பேத் மற்றும் அடெலெயிட் போன்ற முக்கிய நகரங்களில் வாக்குச் சாவடிகள் மூலமாகவும், தபால் வாக்குப்பதிவு மூலமாகவும் இக்கருத்துக்கணிப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வருகிற சித்திரை மாதம் 17 ஆம், 18 ஆம் தேதிகளில் இவ்வாக்கெடுப்பு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளில் இதன் அமைப்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் முதல் படியாக இங்கே இயங்கும் சமூக வானொலிகள், பத்திரிக்கைகள், இணையத் தளங்கள் என்பவற்றில் இக்கருத்துக்கணிப்புப் பற்றிய அறிவித்தல்களும், கருத்துப் பகிர்வுகளும் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

தேசிய உணர்வுடைய அதிகளவான தமிழர்கள் வாக்களிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருத்துக்கணிப்பை வெற்றிபெறச் செய்வது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். என்று தேர்தல் ஏற்பாட்டுக்குழுவால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.



Blog Archive