Sunday, March 01, 2009

கனடா, அமெரிக்க துணைத்தூதுவராலயத்தின் முன்பாக நாளை மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

வன்னியில் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த,சிறிலங்கா அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நாளை (03-03-2009 ) செவ்வாய்க் கிழமை பி.ப 1:00 மணி தொடக்கம் மாலை 6:00 மணி வரை 360 UNIVERSITY AVENUE, (DUNDAS வீதிக்கும் QUEEN வீதிக்கும் இடையில்) வில் நடைபெறவுள்ளது.

பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ உறுவுகள் அனைவரும் ஒன்றாய் ஒரே நாளில் தாம் வாழும் நாடுகளில் மேற்கொள்ளப்படும் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உறவுகளுக்காய் குரல் கொடுப்போம்!

உறவுகளே திரண்டு வாரீர்!

கனடியத் தமிழ் சமூகம்

Blog Archive