Wednesday, October 29, 2008

Awareness Week-November 02-09

Saturday, October 18, 2008

தாய்மடி தாங்குவோம்

Sunday, October 05, 2008

வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது.


வன்னியில் பொது மக்கள் மீதான விமானத் தாக்குதல்களை கண்டித்து லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட வுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை லண்டன் நகரில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டிடத்தின்; முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது

மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரையும் பங்கேற்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகால விடுமுறை கழிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பிரித்தானிய நாடாளுமன்றம் கூடுவதால், அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வருகை தரும் நேரத்தில் இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இதனை தமது தார்மீகக் கடமையாக ஏற்று, தமது ஒற்றுமையையும், விருப்பையும் பிரித்தானிய அரசியல் கட்சிகளுக்கும், அனைத்துலக சமுகத்திற்கும் அனைத்துலக ஊடகங்களுக்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

Wednesday, October 01, 2008

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற அக்டோபர் 2ஆம் தேதி ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி பிறந்த நாளன்று சென்னையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரத்தில் தமிழ்நாட்லுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழர்களுக்கான அமைப்புகளும் பங்கேற்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் அழைப்பு விடுத்திருந்தார்.

தாயக உறவுகளுக்காக TORONTO அனைத்து கலை பண்பாடுக்கழகங்களும் இணைந்து வழங்கும் 27 மணி நேர முத்தமிழ் விழா

டெனமார்க் வாழ் உறவுகளுக்கு தமிழர்புனர்வாழ்வுக்கழகம் விடுக்கும் வேண்டுகோள்

இலங்கை தமிழர் வரலாறு நூல் அறிமுகமும் வெளியீடும் MONTREAL

Blog Archive