Sunday, January 30, 2011

போர்க் குற்றவாளியின் உரையை புறக்கணிக்குமாறு அமெரிக்க மக்களுக்கு கோரிக்கை

Shavendra-Silvaசிறீலங்காவில் இடம்பெற்ற பெருமளவான படுகொலைகளுடன் தொடர்புள்ளஇராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இன்று (30) பொஸ்ரன் நகரில் உள்ள தேவாலயத்தில் ஆற்றவுள்ள உரையை புறக்கணிக்குமாறு புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொஸ்ரன் நகரில் உள்ள எட்வேட் தேவாலயத்தில் இன்று மாலை 3.00 மணி முதல் 5.00 மணிவரை சில்வாவின் உரை இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் தேவாலயத்தின் அதிகாரியான திருமதி ஹெக்மனிடம் கேட்டபோது, சில்வாவின் உரை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். தேவலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சி நிரலை மீண்டும் ஆய்வுக்குட்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சில்வா அங்கு உரையாற்றுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், தேவாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்வதுடன், பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தமிழ் மக்கள் தமது எதிர்ப்பையும் தெரிவிக்குமறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Edward’s church

39 Edwards Street

Framingham, MA 01701-3433, United States

(508) 877-2050

Deacon- Mrs Heckman – 508 877 4029

Edward’s church- 508-877-2050

Blog Archive