Thursday, July 08, 2010

பிரான்சு வாழ தமிழீழ மக்களே! நீதி கேட்போம்! வலியுறுத்துவோம்! கண்டிப்போம்!



சிங்கள பேரினவாத ஆட்சியாளர்களால் ஐ,நா அலுவலகம் முற்றுகையிடப்பட்டதையும், மனதாபிமான பணியாளர் வெளியேற்ற ப்பட்தையும் கண்டிப்போம்.

ஐ,நாவால கொண்டு வரப்பட்ட'போர்க்குற்ற விசாரணைக்குழுவை நாட்டிற்குள் உள்நுழைய அனுமதிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கான பூரண ஒத்துழைப்பை சிங்கள அரசு கொடுக்க வேண்டும் என்று கோரியும்

GSP + வரிச்சலுகைக்கு ஐரோப்பிய அரசு விதித்திருந்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது லட்சக்கறக்கான தொழிலாளர்கள் வாழ்வில் துன்பத்தை ஏற்படுத்தி வரும் சிங்கள அரசினை கண்டிப்போம்.

தமிழீழ மக்களின் நியாயமான கோரிக்கையையும் தனித்தமிழீழமே தமிழர்களின் தீர்வாகும் என்பதை ஏற்றுக்கொண்டும், அதற்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கி தமிழீழ மக்கள் தடையின்றி அரசியல் நீரோட்டத்தில் சுதந்திரமாக, சனநாயக வழியில் தமது உரிமையை வென்றெடுக்க ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கோரியும்

தமிழின இழிப்புப் போரில் பல உயிர்களை பலி எடுத்தும், பல பெண்கள் மீது மோசமான பாலியல் பலாத்காரத்தை புரிந்த சிங்கள அரசின் 58 டிவிசன் பொறுப்பதிகாரியும், தளபதியுமான ஐகதிசு என்பவர் தற்பொழுது Nஐர்மனியில் அரச துணைத்தூதரக அதிகாரியாக இருந்து வருவதோடு பொய்யான பரப்புரைகளிலும், செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் தளபதி ஐகதீசு நாடுகடத்தப்பட வேண்டும் என்றும்

அரசியல் அடைகலம் தேடிவந்த தமிழ் மக்களை தமிழீழத்தில் உயிர் ஆபத்து இல்லை என்று தமிழர் தரப்புகளால் உறுதிப்படுத்தும் வரை நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரியும்

இவ் ஒன்று கூடல் இடம் பெறவுள்ளது

காலம்: 12.07.2010 திங்கட்கிழமை பி.பகல ; 14.00 மணிக்கு

இடம் பிரான்சு பாராளமன்றம் முன்பாக

Métro: Ligne 12 Assemblée National / Ligne 8 Invalides

RER C: Invalides

Blog Archive