Friday, October 29, 2010

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் சிலை திறப்பு வைபவம்

தார்மீகக் கடமையாய்த் தரணியெங்கும் சமாதானப் பேச்சுக்காய்த் தன்னை அர்ப்பணித்த தியாகதீபம் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் ஞாபகார்த்தச்சிலை திறக்கும் வைபவம் 01.11.2010 திங்கள் பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

http://www.sangathie.com/uploads/images/2010/01%28nisan%29/291010%20010.jpg

லண்டனில் நாளை பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும், ஈழத்து காந்தி என பலராலும் செல்லமாக அழைக்கப்படும் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு தினம் நாளை வடமேற்கு லண்டனில் நடைபெறவுள்ளது. அத்தோடு வீரப்பெண் மாலதி அவர்களின் நினைவுதினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

42 ருஷ்குரோவ் அவனியூ, கொலின்டேல், என்ற முகவரியில் சிறப்பாக நடைபெற உள்ள இந் நினைவு நிகழ்வில் பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களும் கலந்துகொள்ளவேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர். நாளை 30ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை இந் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வுகளில் சாட்சி என்ற புத்தகவெளியீடும் இடம்பெறவுள்ளது. சுப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மிக நெருங்கிய சகாக்களில் ஒருவர் இப் புத்தகத்தை எழுதியுள்ளார். மே 18ம் திகதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று, தாம் கண்ணால் கண்ட அனைத்தையும் தனது சாட்சியமாக சாட்சி என்ற நூலாக அவர் எழுதியுள்ளார். எழுத்தாளர் பெயர் குறிப்பிடாமல் இப் புத்தகம் வெளியாகியுள்ளதால், இப் புத்தகம் தொடர்பாக பல நாடுகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாட்சிப் புத்தகத்தின் பிரதிகளை இந் நிகழ்வுகளில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

இடம்: St Matthias Church Hall
42, Rushgrove Avenue,
Colindale, London , NW9 6QS

தொடரூந்து: Hendon Overground or Colondale Underground

Thursday, October 28, 2010

ஒவ்வொரு தமிழனின் வரலாற்று கடமை:

இலங்கை அரச பயங்கரவாதத்தின் மனித உரிமை மீறல்களின் சாட்சியங்களை ஐநா நிபுணர் குழுவுக்கு அனுப்புங்கள்

ஜூன் 22ம் திகதி ஐ.நா ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக் குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிபுணர்கள் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், மேலதிக விபரங்களையும் பெறவிரும்புவதாக தெரிவித்துள்ளது.

நீங்கள் டிசம்பர் 15ம் திகதிவரை அவர்களை தொடர்புகொள்ள முடியும். 10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் நீங்கள் அவர்களுக்கு அனுப்பிவைக்க முடியும். நிபுணர் குழுவிற்கு தமிழர்கள் தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால், சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை எவரும் மறக்கவேண்டாம்.

நமக்கு என்ன, என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விடவேண்டாம். எம்மாலான எல்லா முயற்சிகளையும் நாம் செய்துகொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலே ஐ,நா நிபுணர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி கீழே தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்யவேண்டும்.

உங்களால் அனுப்பப்படும் எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் ஐ.நா வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விரைந்துசெயற்பட்டு, உங்கள் சாட்சிகளை உடனே ஐ.நா நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கவும் என நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம். உங்களுக்கு ஆங்கிலத்தில் கடிதத்தை எழுதுவதில் சிக்கல் இருந்தால், பிரித்தானிய தமிழர் பேரவை அலுவலகத்தோடு, அல்லது உறுப்பினர்களோடு தொடர்புகொள்ளவும். அவர்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவார்கள்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர்புகளுக்கு

British Tamils Forum
Unit 1
Fountayne Business Centre
Broad lane
London N15 4AG

Telephone: +44(0)20 8808 begin_of_the_skype_highlighting +44(0)20 8808 end_of_the_skype_highlighting +44(0)20 8808 3224, +44(0)20088080465, +004(0)7814484793

Web Site : www.tamilsforum.com
E-mail : admin@tamilsforum.com, btfmediateam@googlegroups.com, btf@sriranjan.com

ஐநா நிபுணர் குழுவை தொடர்பு கொள்ளும் வழிகள்

E-mail:
panelofexpertsregistry@un.org

POSTAL ADDRESS - U.S.A:
UNITED NATIONS,
N.Y. 10017
USA.

POSTAL ADDRESS – Switzerland:

United Nations Secretary-General’s
Advisory Panel on Sri Lanka
Office of the High Commissioner for Human Rights – OHCHR
Palais Wilson
United Nations
Geneva
Switzerland

Blog Archive