Monday, January 24, 2011

முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயண தொடக்க நிகழ்வு – தூத்துக்குடி

IMGA0051
வீரத்தமிழன் முத்துக்குமார் இனவெழுச்சி சுடர் ஊர்திப்பயணம் இன்று காலை முத்துக்குமரனின் சொந்த ஊரான தூத்துக்குடி கொழுவைநல்லூரில் தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை தோழர்கள் அருண்சோரி, இரணியன் தலைமையில் தொடங்கியது,

இன்று (24.01.2011) காலை 10.30 மணியளவில் முத்துக்குமாரின் சொந்த ஊரான கொழுவை நல்லூரில் அவரது வீட்டில் அவரது பாட்டி சுடரினை ஏற்றிவைக்க சுடர் பயணத்தை இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் தோழர் நல்லக்கண்ணு சிறப்புரையாற்றி தொடங்கிவைத்தார். பயணத்தின் பொழுது தூத்துக்குடி ஆத்தூரில் ஆதித்தமிழர்பேரவையின் தோழர் மனோகரன் சிறப்புரையாற்றினார்.

தூத்துக்குடி காமராசர் கலைக்கல்லூரி முன்னர் மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் தோழர் தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார். பின்னர் தூத்துக்குடியில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலை முன்பாக பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் சுடர்ப்பயணக்குழுவினரை வாழ்த்தி சிறப்புரையாற்றி வழியனுப்பி வைத்தார்.

இந்நிகழ்வில் இந்தியப்பொதுவுடைமைக்கட்சியின் மாவட்டச்செயலாளர் தோழர் மோகன்ராசு மற்றும் தோழர்கள், ஆதித்தமிழர் பேரவையின் தோழர்கள், பெரியார் திராவிடர் கழகம் மற்றும் தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். தூத்துக்குடியில் சுடர்பயண தொடக்க நிகழ்விற்கான ஏற்பாட்டினை பெரியார் திராவிடர் கழக தலைமைசெயற்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் செய்திருந்தார்.
IMGA0062IMGA0064IMGA0071

Blog Archive