Saturday, December 11, 2010

போராளி-பத்திரிகையாளர் இசை பிரியாவிற்கு வீரவணக்க கூட்டம்

-தமிழினப் படுகொலையும் வெளியாகும் ஆதாரங்களும்
New information on the Sri Lanka war crimes video: victim could be Isaipriya

சனவரி 9 , 2011 சென்னை
மே பதினேழு இயக்கம்

வியேத்நாம் போரின் கொடூரங்களை சொன்ன 'ஓடி வரும் அந்த சிறுமியின் புகைப்படம்' (கிம் சுக்) உண்மையை உரைத்த பிறகு போரை நிறுத்த,போராட்டம் நடத்த வேண்டிய அழுத்தத்தை உலகிற்கு கொடுத்தது, போர் முடிந்த பிறகும் அந்த சிறுமி இன்று வரை நம்முடன் உயிரோடு தான் இருக்கிறார். போரின் கொடுமையை தமிழினம் உரத்து கொடுத்த போது திரும்பி பார்க்காத சமூகம் இன்று வெளியாகும் காணோளிகளால் விழிப்படைந்து பார்க்கும் சமயம், அங்கு காப்பாற்ற மக்களும் இல்லை, பச்சைபடுகொலையை உணர்த்திய இசைபிரியாக்களும் இல்லை. பிணமாய் நாமும், படங்களை அவர்களும் துயரப்பட்டு கொண்டிருக்கிறோம்.

இசைபிரியாவையும் ஏனைய போராளிகளையும் பார்த்த உலக சமூகம் இப்போது நிர்வாணமாய் நிற்கிறது. துயரப்படங்களையும் துரோகத்தையும் பார்த்து பார்த்து பழகிவிட்ட சமூகமாய் தமிழ் சமூகம் நிற்கிறது.

இறுதி வரை சமரசம் செய்யாத போராளிகளாய் நின்றவர்களுக்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்ல, இசைபிரியாவை கொலை செய்ய துணை போன சமூகத்தை கேள்வி கேட்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.

மே 17 , 18 படுகொலை நடந்த ஒரு வாரத்தில் அங்கு சென்று பார்வை இட்ட ஐ. நா தலைவர், அந்த ஒரு வாரத்தில் உதவி தொகையை அளித்த இந்திய சோனியா அரசு, ஐ. நா வில் வர இருந்த இலங்கை மீதான விசாரணை தீர்மானத்தை தடுத்த இந்தியா உள்ளிட்ட நாடுகள், மத்திய மந்திரி பதவி ஒதுக்கீட்டில் தமிழர்களை மறந்த தி.மு.க மற்றும் தோல்வியில் தூங்கி போன கட்சிகள் என அனைவரின் முன்னிலயில் தான் இசைபிரியா கொல்லப்பட்டார்.

இங்கு இசைபிரியா என்பவர் ஒரு தனி நபர் அல்ல, உலக சமூகத்தால் ஒரு மிருகத்தின் வாயில் தனித்து, கைகள் கட்டப்பட்ட நிலையில், வேட்டையாட விடப்பட்ட தமிழீழ சமூகமே.

போருக்கு பிறகு அமைதியை காத்த தமிழக தமிழர்களும் இந்த குற்ற சாட்டுக்கு விலக்கானவர்கள் அல்ல. நம் கண் முன்னால் தான், நம்மின் மௌனத்தின் மீதுதான் இந்த பச்சை படுகொலைகள் நடந்தன. போருக்கு பிறகு எழுச்சி பெற்று இருக்க வேண்டிய சமூகம் அவ்வாறு தனது கடமையை செய்யாமல் போனதன் சாட்சி தான் இசை பிரியாக்கள்.
தான் பெற்ற 6 மாத குழந்தையை போரில் பறிகொடுத்த பிறகும் உறுதியாய் இறுதி வரை எதிரியை எதிர்கொண்ட அந்த மாமனித போராளிக்கு வீரவணக்கம் செலுத்துவதில் இருந்து நமது உத்வேகமுற்ற போராட்டத்தை ஆரம்பிப்போம்.

போர் எதிர்ப்பு போராட்டத்தின் மையமாய் எப்படி மாவீரன் முத்துகுமரன் இருந்தாரோ, எப்படி திலீபன் இந்தியா அமைதிபடையின் எதிர்ப்பு மையமாய் மாறினாரோ அவ்வாறே போரின் பிறகான புத்துணர்வு பெரும் போராட்டத்தின் மையமாய் போராளி பத்திரிகையாளர் இசைபிரியா. இசைபிரியா சிங்கள கோரமுகத்தின் எதிர்ப்பு குறியீடு. மரணத்தின் வாயிலில் சமரசம் செய்யாத தமிழீழ போராளியின் அடையாளம், இசைபிரியாவுடன் கொள்ளப்பட்ட அனைத்து போராளிகளும் அவ்வாறானவர்களே. இசைபிரிய இந்த போராட்ட குணத்தின் அடையாளமாய் நம்முன் நிற்கிறார்.

தமிழீழபோராளிகளை, தமிழீழ மக்களை -நாம் இந்த செய்தியை படிக்கும் இதே கணத்தில்- கொல்வதற்கு அனுமதிக்கும் செயலாக நமது மௌனம் ஆக கூடாது. நாம் மறக்க கூடாதது நமது இந்த மௌனம்தான் போர் முடிந்த இரண்டு மாதம் கழித்து இந்த போராளிகள் நம் மௌனத்தை சாட்சியாய் வைத்து கொல்லப்பட்டார்கள் என்பதை.

இணைந்து பணியாற்ற அனைத்து அமைப்புகளுக்கும் பணிவான கோரிக்கை வைக்கிறோம். இந்த நிகழ்வு மே பதினேழு இயக்கத்திற்கு மட்டுமே சொந்தமான ஒன்றல்ல, அனைவரும் இணைந்து இந்த வீர வணக்க நிகழ்வை நிகழ்த்தி இனிவரும் போராட்டத்திற்கு ஆரம்ப புள்ளி வைப்போம்.

ஒன்று திரள்வோம்.
மே பதினேழு இயக்கம் - contact.may17@gmail.com , thiruja@yahoo.com

Thursday, December 02, 2010

போர்க்குற்றவாளி மஹிந்தாவை கைது செய்யுங்கள்: பிரித்தானிய பொலிசாரிடம் தமிழர்கள் முறைப்பாடு (காணொளி இணைப்பு)

பிரித்தானியாவில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையம் சென்று போர்க்குற்றவாளி மஹிந்தராஜபக்ஷவை கைது செய்யுமாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

லண்டனில் வசித்துவரும் பல தமிழர்கள் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று மகிந்தவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.



இம் முறைப்பாடுகளுக்கு பொலிசால் எதுவும் செய்யமுடியாமல் போனாலும், மக்கள் கொடுக்கும் முறைப்பாடுகளை அவர்கள் கட்டாயம் பதிந்து அதற்கான குற்ற இலக்கத்தை வழங்கவேண்டும்.

எனவே தமிழர்கள் அனைவரும் தமது உள்ளூர் போலீஸ் நிலையங்களுக்குச் சென்று முறைப்பாடுகளை மேற்கொண்டு குற்ற இலக்கத்தை எடுத்துக்கொள்வது நல்லது. தற்போது இலங்கையின் தலைமை அமைச்சர் என்ற பதவியில் அவர் இருப்பதால் பிரித்தானியா அவரைக் கைதுசெய்யவில்லை.

ஆனால் அவர் அப்பதவியில் இருந்து இறங்கும் தறுவாயில் அவரைக் கைதுசெய்யும் உரிமை பிரித்தானிய சட்டத்தில் உள்ளது.

மற்றும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாழியைக் கண்டு பிடிக்கவில்லை என்றால் பிரித்தானியப் பொலிசார் அந்த வழக்கை மூடப்போவது இல்லை. அது தொடர்ந்தும் திறந்த ஒரு வழக்காகவே இருக்கும்.

இக் காரணத்தால் மகிந்த பிரித்தானியா பக்கம் தலைவைத்தே படுக்கமுடியாத நிலை தோன்றலாம். எனவே பொதுமக்கள் விரைந்து செயல்படுங்கள். நீங்கள் கொடுத்த வாக்குமூலத்தை பொலிசார் பிரதியாக எடுத்து உங்களிடம் தருவார்கள். அதனை பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினர்களிடம் கையளியுங்கள் என ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

மக்களே தாமதிக்காமல் இன் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். உடனடியாக முறைப்பாடுகளை மேற்கொள்ளுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேல் முறைப்பாடுகள் குவியும் காலகட்டத்தில், பிரித்தானிய சட்ட அமைச்சின் உதவிகளை நாட ஏற்பாட்டாளர்கள் முனைகின்றனர்.

Wednesday, December 01, 2010

மஹிந்த தங்கி நிற்கும் விடுதி முன் ஆர்ப்பாட்டம்

Now Killer rajapaksa Demo is Moved To Dorchester Hotel London Park Lane W1A 2HJ



தமிழர்களை அழித்து ஒழித்த கொலைகார இலங்கை கிட்லர் மகிந்தா அவரது படை பட்டாளங்களுடன் ஆடம்பர விடுதியில். தங்கி நின்று கும்மாளம் .முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள் சாவல் விட்டு மக்களின் ஆர்ப்பாட்டத்தை ஜன்னல் வழியாக பார்வை இட்டு கொண்டுள்ளாராம் ./


கொட்டும் அடர் பனி மழைக்குள்ளும் கடும் குளிரில் நடுங்கிய படி மக்கள் அங்கும் ஆர்ப்பாட்ட போர்க்கொடியை நடத்திய வண்ணம் உள்ளனர் .

நீங்களும் இன்றே சென்று கலந்து கொள்ள கீழ் வரும் முகவரிக்கு விரைந்து செல்லுங்கள்.

கொடுங்கோலன் மஹிந்த தங்கி நிற்கும் விடுதி முகவரி மற்றும் நம்பர் இங்கே மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய வண்ணம் இருக்கிறார்கள்.


தொலைபேசி இலக்கம். 00442076298888

DORCHESTER HOTEL

MAYFAIR ,PARK LANE

LONDON W1K 1QA.

போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு :

North West Transport arrangement, All coaches Leave at 3pm:-

Harrow: Ashely cash& carry, Abi diamond, Rooks Heath School.

Sothall: Tamilini cash & carry, Lady Margaret halal meat, Goldman Estate.

Hayes: Tamilan cash & carry.

Wembley: In front of Alperton underground station.

Colindale: Thirupathai cost cutter, Royal Food & Wine.

Watford: St Albans Road.

More info: 075 7268 0443

மேலதிக பேரூந்துகள் விடப்பட இருப்பதால் உங்கள் அருகில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்புகொள்ளுங்கள்.

ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து கனடியத் தமிழர் நடாத்தும் கண்டன ஒன்றுகூடல்

போர் குற்றவாளி ராஐபக்சவின் பிரித்தானிய வருகையை எதிர்த்து பிரித்தானியா வாழ் எமது உறவுகள், தொடர் போராட்டங்களை அங்கு நடாத்தி வருகின்றனர்.

அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சர்வதேச நீதிக்கூண்டில் போர் குற்றங்களுக்காக நிறுத்தப்படவேண்டிய ராஐபக்சவை எந்தவொரு நாட்டிலும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியும், டிசம்பர் 2ஆம் நாள் வியாழக்கிழமை, முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை ரோரன்ரோ, மொன்றியல் நகரங்களில் அமைந்துள்ள பிரித்தானிய துணைத்தூதரங்களுக்கு முன்னர் கண்டன ஒன்றுகூடல் ஒன்று கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.


இடம்: 777 Bay Street, Toronto (Bay & College) Subway : College

1000 De La Gauchetière St. W. Montreal.

காலம்: முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை
பெருமளவில் கலந்து எமது உணர்வை வெளிப்படுத்த அனைவரும் அழைக்கப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
416 646 7624

ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்கான வாகன ஒழுங்கு விபரங்கள்

நாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது.

PROTEST AGAINST WAR CRIMINAL RAJAPAKSE AT OXFORD UNION

FREWIN COURT,

OXFORD,

OX1 3JB,

DATE/ tHURSDAY 2nd DEC,

4 PM

நாளை நடைபெறவுள்ள ஒக்ஸ்ஃபேட் போராட்டத்திற்காக பேரூந்துகள் உங்கள் நகரங்களில் இருந்து புறப்படவுள்ளது. அதன் விபரங்கள் பின்வருமாறு :

North West Transport arrangement, All coaches Leave at 3pm:-

Harrow: Ashely cash& carry, Abi diamond, Rooks Heath School.

Sothall: Tamilini cash & carry, Lady Margaret halal meat, Goldman Estate.

Hayes: Tamilan cash & carry.

Wembley: In front of Alperton underground station.

Colindale: Thirupathai cost cutter, Royal Food & Wine.

Watford: St Albans Road.

More info: 075 7268 0443

மேலதிக பேரூந்துகள் விடப்பட இருப்பதால் உங்கள் அருகில் உள்ள தமிழ் அமைப்புகளோடும் தொடர்புகொள்ளுங்கள்.

Blog Archive