Tuesday, October 27, 2009

நவம்பர் மாதம் 15ஆம் நாள் நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல்


தாயக மக்களின் அரசியல் அபிலாசைகளுக்காக குரல் கொடுத்து உழைக்கவும் நோர்வே வாழ் தமிழீழ மக்களின் நலன்களுக்காக செயற்படவும் "நோர்வே ஈழத் தமிழர் அவை" எனும் புதிய ஜனநாயக அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.

இதற்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் நாள் நடாத்தப்படவுள்ளது.

மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட ஜனநாயக அமைப்பாக நோர்வே ஈழத்தமிழர் அவையானது அமையவிருப்பதாக இவ் அமைப்பினை உருவாக்குவதற்கான செயற்குழு தெரிவித்துள்ளது.

அந்த செயற்குழு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வன்னி வதை முகாம்களில், நாளும் இன்னலுறும் எம்முறவுகளின் இன்னல்களைப் போக்கிடச் சர்வதேச சமூகத்திடம் உரிமையுடன் குரல் கொடுக்கவும்,

நோர்வேவாழ் தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்தம் வளர்ச்சிக்காய் வழிவகுக்கவும்,

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்திய வாக்கெடுப்பின் அடிப்படையில் தாயக உறவுகளின் நிரந்தரத் தீர்வுக்காய் பணியாற்றிடவும்,

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீளுறுதிப்படுத்தும் வகையில் நோர்வேயில் நடைபெற்ற வாக்கெடுப்பிற்குத் தமிழர்களின் பேராதரவு கிடைத்ததன் அடிப்படையில் இம்முயற்சியானது முன்னெடுக்கப்படுகின்றது.

அரசியல், சமூகம், பொருண்மியம், பண்பாடு, மொழி, கல்வி எனப்பல்வேறு தளங்களிலும் தக்க பணியாற்றிடத் தக்கதோர் அவைதனைத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யும் முதன்முயற்சி, முதன்முயற்சியாய் அமைய அனைவரும் இணைவோம்.

நோர்வே வாழ் ஈழத்தமிழர்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட நோர்வே ஈழத்தமிழ் மக்களவை, வட்டுக்கோட்டைப் பிரகடனத்தின்படி சுதந்திரமும் இறைமையும் மிக்க தமிழீழ அரசினை அமைப்பதற்காக நோர்வே நாடளாவிய ரீதியில் தொடர்ந்தியங்கும்.

நோர்வேத் தமிழ் அமைப்புக்களால் தெரிவு செய்யப்படும் நோர்வே ஈழத்தமிழ் அமைப்புக்கள் தெரிவவை என இருபிரதிநிதிகள் குழுக்களைக் கொண்டதாக நோர்வே ஈழத்தமிழர் அவை அமையும்.

போட்டியிடும் தகுதி பெற்றோர்:

நோர்வே ஈழத்தமிழர் அவையின் யாப்பினை ஏற்றுக்கொள்ளும், நோர்வேயில் நிரந்திர வதிவிட அனுமதியுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இத்தேர்தலில் போட்டியிடலாம்.

வாக்களிக்கும் தகுதி பெற்றோர்:

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 16 வயதுக்கு மேற்பட்ட நோர்வே வாழ் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் அல்லது மேற்குறிப்பிடப்பட்டவர்களை சட்டரீதியான வாழ்க்கைத் துணைவர்களாகக் கொண்டவர்கள் வாக்களிக்கும் தகுதி பெறுவார்கள்.

தேர்தல் திகதியும், வேட்புமனுத் தாக்கலும் எதிர்வரும் கார்த்திகை 15இல் (15.11.2009) நோர்வே ஈழத்தமிழர் அவைக்கான தேர்தலை நடத்துவதென, இவ்வமைப்பின் தேர்தற்பணிகளை முன்னெடுத்துவரும் சுயாதீனத் தேர்தற்குழுவானது தீர்மானித்துள்ளது.

இவ்வமைப்பின் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் 18.10.2009ஆம் திகதி தொடக்கம் 30.10.2009ஆம் திகதிவரை பெற்றுக் கொள்ளப்பட்டு, வேட்பாளர் பட்டியல் 01.11.2009ஆம் திகதி வெளியாகும்.

இத்தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களைப் பிரேரிக்க விரும்புவோர் www.ncet.no எனும் இணையத்தளத்தில் உள்ள வேட்பாளர் படிவத்தைப் பூர்த்தி செய்து, பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

Norwegian Council of Eelam Tamils

Post boks 15,

Furuset,

1001 Oslo

குறிப்பு:

தமிழ், ஆங்கில மொழிகளிலும் வரையப்பட்டுள்ள நோர்வே ஈழத்தமிழர் அவையின் மாதிரி யாப்பானது, www.ncet.no எனும் நோர்வே ஈழத்தமிழர் அவையின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. யாப்பின் இறுதிவடிவம் தமிழ், ஆங்கிலம், நொஸ்க் ஆகிய மும்மொழிகளிலும் 17.10.2009ஆம் திகதி வெளியாகும்.

தொடர்புகளுக்கு:

தொலைபேசி: +4746350158

மின்னஞ்சல்: post@ncet.no

Monday, October 26, 2009

பிரான்சில் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தீர்மானத் தேர்தல்

புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப்போகின்றது. இது தொடர்பில் பிரான்சு தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

அன்பான தமிழீழ மக்களே!

ஈழத்தமிழினம் தான் இழந்ந உரிமையை மீண்டும் பெற்றிட பல அறவழிப் போராட்டங்களை நடாத்திய போது அப்போராட்டங்கள் யாவும் ஆளும் கட்சிகளால் ஆயுதம் கொண்டு அடக்கப்பட்டதும் பல உயிர்கள் எடுக்கப்படுவதும் வழமையான வாழ்வாகி தமிழர்களுக்கு போனதால் தமிழீழத் தந்தை அமரர் எஸ்.ஜே. வி.செல்வாநாயகம் அவர்கள் 1976ல் தமிழீழ மக்கள் சுதந்திரமும், சந்தேசமாகவும் வாழவேண்டுமாயின் அது நாங்கள் இழந்து போன இறைமைகொண்ட சுதந்திர தமிழீழத்தை மீண்டும் பெற்றெடுப்பதே என்று அறுதியும் இறுதியுமாக எடுத்துரைத்தது மட்டுமல்லாது அதனை ஆதரித்து அதற்காக அங்கீகாரத்தை 1977 ல் வட்டுக்கோட்டை என்னும் பிரதேசத்தில் ஐனநாயகத் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் நிரூபித்து காட்டியிருந்தனர்.

அதனை ஏற்றுக் கொள்ளாத சிங்கள இனவாத அரசுகள் தமிழ் மக்களின் அபிலாசைகளை புறம் தள்ளி திட்டமிட்ட இனக்கலவரங்களை உருவாக்கி, தமிழ் மக்கள் தொடர்ந்து உயிர், உடமை, நிலம் பறிப்பு, கைதுகள், படுகொலைகள், காணாமல் போதல் போன்ற தமிழருக்கெதிரான நடவடிக்கையில் இறங்கியதால் தமிழ் மக்கள் தமது உயிர் வாழ்விற்காக ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர் என்பதே உண்மையானதாகும். இந்த போராட்டம் பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளின், மக்களின் உயிர் அர்ப்பணிப்பினால் தமிழீழ மக்களுக்கு உலகில் ஒரு உயர்வான நிலைக்கு இட்டுச்சென்றதோடு நீறு பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருக்கும் எமது உரிமை போராட்டம் உலகத்தின் இன்றைய விருப்பான சமாதான அரசியல் மூலம் குறிக்கோளை அடையலாம் என்பதால் அந்த அற்புதமான தியாகப் போராட்டம் மௌனித்து நிற்கின்றது என்பதே உண்மை.

அதே நேரத்தில் எமது மக்களின் இன்றைய அபிலாசைகளையும், 1977ல் தமிழ் மக்கள் கொடுத்த அங்கீகாரத்தையும் 32 வருடங்களின் பின் ஈழத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை நாடி பிடித்து பார்க்கும் செயலில் சர்வதேசம் நாட்டம் கொண்டுள்ளதையும் புரிந்து கொள்வோம். அன்பார்ந்த தமிழீழ மக்களே! சர்வதேசம் இன்று ஈழத்தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பை விரும்பியோ அன்றில் விரும்பாமலோ ஒரு தீர்வை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றது. அதற்கு காரணம் இனவெறி பிடித்த சிங்கள அரசுகள் தமிழ் மக்களுக்கு 60 வருடங்களுக்கு மேலாக கொடுமைகள் இழைத்த போதும், அவர்களின் வாழ்விடங்கள் திட்டமிட்ட ரீதியில் பறிக்கப்பட்டபோதும், உள்நாட்டுப் பிரச்சனை எனக் கூறிக்கொண்டு தமிழ் மக்கள் கைதுகளும், காணாமல் போதல், படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட போதும், தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் படிப்படியாக உச்சமடைந்து மக்கள் போராட்டமாக பரிணமித்து சிங்கள தேசத்திற்கு சரிநிகராக தமிழ் மக்கள் உயர்வடைந்து நின்ற போதும், அதனை அடக்குவதற்கு இந்திய அரசு அமைதிப்படை என்ற பெயரில் எமது மண்ணையும், மக்களையும் தாங்கொணா துன்பப்படுத்திய போதும் எமது இனப்பிரச்சனையின் தீர்வுக்கு மூன்றாம் தரப்பாக உலக நாடுகள் உதவிட வேண்டும் என்ற எங்கள் தேசிய ஆன்மா கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்திய போதும்,

சர்வதேசம் வரை கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்களின் நியாயமான போராட்டம் இலங்கை அரசினால் புறம்தள்ளப்பட்டு மீண்டும் போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பதை தெரிந்து கொண்ட போதும், உலகம் முழுவதும் ஓடிச்சென்று வகை தொகையின்றி ஆயுதங்களை கொள்வனவு செய்த போதும், உலகத்திற்கு பயங்கரமான நாடுகள் என்ற நாடுகளுடன் நட்பையும் இராணுவ உதவிகளையும் பெற்றுக்கொண்ட போதும், தடைசெய்யப்பட்ட குண்டுகளை வாங்கி குவித்த போதும்,பயங்கரவாதத்துக்கெதிரான போர் எனக்கூறிக்கொண்டு எமது மக்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனஅழிப்பை தொடங்கி சொல்ல முடியாத துன்பங்களை எம்மக்களுக்கு ஏற்படுத்திய போதும், கொத்துக் கொத்தாக எம்மவர்கள் கொன்று குவிக்கப்பட்ட போதும், இன்று முகாம் என்ற பெயரில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டு பழிவாங்கல் செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு தினம் தினம் கொன்றொழித்து வருவதை ஆதார பூர்வமாக சர்வதேச ஊடகங்கள் தெரியப்படுத்த போதும் வேடிக்கை பார்த்த,

பார்த்து வரும் சர்வதேசம் தனது மனசாட்சிக்கு விடைகாணும் ஒரு முயற்சியாக புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் தாயகம் நோக்கி இன்றைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஆவலாக இருப்பதையும் நாம் புரிந்து கொள்வோம். அதனுடைய ஒரு களமாகவே எதிர்வரும் 12, 13 திகதிகளில் தமிழர் அமைப்புக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் நடாத்தப்படவிருக்கும் வட்டுக்கோட்டை தேர்தல் அமையப் போகின்றது. அன்பான பிரான்சு வாழ் தமிழீழ மக்களே! நாம் இழந்தவைகள் கொஞ்சம் நஞ்சமல்ல! அதை உங்களுக்கு மீண்டும் தெரியப்படுத்தும் காலமும் இதுவல்ல! நீங்கள் ஒன்றும் தேசப்பற்று இல்லாத தமிழரும் அல்ல! இத்தேர்தலில் நாம் அளிக்கப்போகும் வாக்குகள் எமது தமிழ் மக்களின் தலைவிதியை கூட தீர்மானிக்கப்போகும் ஒரு பெரும் சக்தியாகக்கூட இருக்கலாம்! பற்பல அற்புதமான தியாகங்களை புரிந்தவொரு இனத்தில் இருந்து தோன்றியவர்கள் நாம்.

இன்று ஒரு மணி நேரம் செய்யப்போகும் ஒரு தியாகம் எம்மை மண்ணுக்காக, எம்மை நம்பி மானம் காத்து மண்ணில் சாய்ந்த மாவீரர்களுக்காகவும், முட்கம்பி வேலிகளுக்கு துன்பமே வாழ்வாகி வாழும் எம்மக்களுக்காகவும், எதிர்கால வாழ்வே இனி என்ன என்று தெரியாமல் இருக்கும் எங்கள் மண்ணின் விலைபேச முடியாத வீர, வீராங்கனைகளின் வாழ்வில் எதிர்பார்த்த கனவை நனவாக்கும் என நம்புவோம், புறப்படுவோம்!, செயற்படுவோம்! வாக்களிப்போம்! மற்றவர்களையும் உரிமையுடன் வாக்களிக்க வைப்போம்! காலம்: டிசெம்பர் 12, 13, சனி, ஞாயிறு காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 16.00 மணிவரை இத்தேர்தலில் வாக்களிக்கும் தகுதி கொண்டவர் 18 வயதிற்கு மேற்பட்ட தமிழீழத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். இந்நபர் தான் வசிக்கும் (Residence) இடத்தில் உள்ள அல்லது அதற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்று வாக்களிக்கலாம்.

மேலதிக விபரங்களுக்கும், தொடர்புகளுக்கு

mail: mte.france@gmail.com

தொலை பேசி இல : 06 15 88 42 21

டிசெம்பர் 12,13, 2009 தேர்தல்

ஏற்பாட்டுக்குழு

தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு

Thursday, October 22, 2009

லண்டனில் ஆர்ப்பாட்டம் Unlock the Concentration Camps

TYO & BTF holding Mass protest to FREE the illegally detained Tamils in the island of Sri Lanka- Unlock the Concentration Camps and to highlight Sri Lanka's war crimes against Tamil civilians

Reminder: Our people are still in the Concentration Camp.

FRIDAY 23rd OCTOBER
2PM TO 7PM

IN FRONT OF 10 DOWNING STREET

London
SW1A 2AA

Tube: Westminster

ரொரன்ரோவில் UNICEF Main Office முன்பாக ஆர்பாட்டம் -Unlock the camps Save the Children


Rally: Unlock the camps Save the Children
Where: UNICEF Main Office [2200 Yonge St (South of Eglington)] Eglington Subway
When: Friday October 23, 2009 12 p.m.-7 p.m.

Thursday, October 15, 2009

மாபெரும் பேரணிக்கு தயாராகும் பிரித்தானிய தமிழர்

வதைமுகாங்களில் எமது உறவுகள் அடைக்கப்பட்டு 150 நாட்களாவதை குறிக்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையும் பிரித்தானிய இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாபெரும் பேரணி அக்டோபர் மாதம் 17ம் திகதி சனிக்கிழமை லண்டனின் மையப்பகுதியில் நடைபெறப்போகின்றது.

இப்பேரணிக்கு மக்கள் அனைவரும் தமது முழுமையான பங்களிப்பினைச் செய்யவேண்டுமென பேரவை வேண்டி நிற்கின்றது.

முன்னர் நடைபெற்ற பேரணிகளுக்கு வழிபாட்டுத் தளங்கள் , தமிழ் அமைப்புக்கள் , தமிழ்ப்பாடசாலைகள் , தமிழர் நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பினை நல்கியதை பேரவை நன்றியோடு நினைவு கூறுகின்றது. அதேபோல் இம்முறையும் அனைவரினது முழுமையான ஒத்துழைப்பினை தர வேண்டுமெனவும் பிரித்தானிய தமிழ் மக்கள் சார்பாக பேரவை கேட்டுக்கொள்கின்றது.

விழி தூங்கோம் (கனடாவில் தொடரும் கவனயீர்ப்பின் 175வது நாள் கவனயீர்ப்பு பேரணி

விழி தூங்கோம்
தொடர்ந்து போராடுவோம்.

PROTESTING AGAINST SRI LANKAN OPPRESSION

கனடாவில் தொடர்கவனயீர்ப்பின் 175வது நாள்
மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

சனிக்கிழமை ஒக்டோபர் 17ந்தேதி மதியம் 12மணியிலிருந்து - மாலை 7 மணிவரை


360 யூனிவேர்சிற்ரி அவெனியுவில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக

360 University Ave
Toronto
(416) 418-1654

www.ctltnews.com

இத்தொடர் கவனயீர்ப்பின் முன்னைய பதிவுகளைப் பார்வையிட கீழ்க்காணும் இணைப்பை அழுத்துக.

http://www.yarl.com/...showtopic=64069


Posted Image

Wednesday, October 14, 2009

சிறிலங்காவின் போர் குற்ற பதிவு தொடர்பான கருத்தரங்கு






Centre for War Victims and Human Rights (CWVHR)

சிறிலங்காவின் போர் குற்ற பதிவு தொடர்பான கருத்தரங்கு நாளை நடைபெறவிருக்கின்றது

நாளை ரொரன்ரோவில்
பெலமி , புரோகிரஸ் சந்திப்புக் கருகாமையில்
கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம்

A Public Forum On
"War Crimes in reference to Sri Lanka"

Place : 705 Progress Avenue, Unit 106, Scarborough, ON M1H 2X1

Date and Time: October 15th, Thursday at 7.00 P.M

Guest Speaker

Lawyer Lorne Waldman

(An Expert on Human Rights and Refugee Laws)

John Argue

Coordinator for Amnesty International on Sri Lanka

A Presentation of CWVHR Databases

All are welcome



CWVHR.org / 416 628 1408

Monday, October 12, 2009

சிறிலங்காவின் போர்க் குற்றத்திற்கு தண்டனை வழங்க உதவிடுங்கள்






cyfpd; kdr;rhl;rpia Vkhw;wp tpl;L

cjtp jUk; ehLfspd; Ntz;LNfhis cjwpj;js;sp

25>000 vk; cwTfspd; capHfis gyp vLj;J

35>000 $LjyhdtHfis gLfhag;gLj;jp

300>000 ,d;Wk; jLg;G Kfhk;fspy; mbg;gil trjpfsw;Wk;

15>000 $Ljyhd ,isQiuAk; ,sk; ngz;fisAk; tijKfhk;fspy;; rpj;jpiutij nra;J nfhz;bUg;gtHfis

,d;Dk; thHj;ijdfspy; tpgupf;f Kbahj nfhLikfis nra;Jnfhz;bg;gtHfis

cyfpy; cs;s midj;J NghHf;Fw;wq;fisAk; vk; cwTfspd; Nky; GupgtHfis


ehk; vd;d nra;a KbAk; vd vz;Zfpd;wPHfsh?

&thz;lhtpy;> rpNyhNtdpahtpy; ,Nj Nghy ,dg;gLnfhiynra;jtHfis midj;Jyf ePjpkd;wj;jpy; epWj;jpdhHfs;. jz;lidAk; ngw;Wf; nfhLj;jhHfs;.

md;ghd Gyk;ngaH jkpo; cwTfNs!


vkJ kf;fSf;F NeHe;j kdpj cupik kPwy;fis> nfhiyfis> NghHf;Fw;wq;fis Mtzg;gLj;j Ntz;ba mtrpak; fhyj;jpd; fl;lhak;.

NrhHe;jpUf;Fk; Neuky;y ,J!

,yq;if murgilfspd; ml;^opaj;jhy; cq;fs;

cwTfisg; gwpnfhLj;jpUe;jhNyh> cq;fs;

cwTfs; cly;> Cdkhf;fg;gl;bUe;jhNyh> fhzky; NghapUe;jhNyh my;yJ mfjp Kfhk; vd;w ngaupy; ,aq;Fk; tijf;$lq;fspy; jLj;J itf;fg;gl;bUe;jhNyh jaTnra;J


gpd;tUk; njhiyNgrp vz;zpy;


416 628 1408


njhlHG nfhs;Sq;fs;. cq;fs; ngaH njhiyNgrp vz;iz gjpT nra;Aq;fs;. cq;fSld; njhlHG nfhs;SNthk;.

vkJ eLtj;jpd; Kftup

705 NghNuhfpw]; rhiy> myF 106 Nuhud;Nuh> M1H 2X1

rdp> QhapW ehl;fspy; K.g 12.00 Kjy; khiy 6 kzp tiuAk;

jpwe;jpUf;Fk;.

$Ljy; tptuq;fis


vd;w ,izaj;jsj;jpYk; ngw;Wf;nfhs;syhk;.

,j;juTfs; vk;kpdj;jtH kPJ ml;Lopaj;ij fl;ltpo;j;J tpl;ltHfis ePjpapd; Kd; epWj;j cjTnkd;gjhy; ,e;j mwf;flikia cld; epiwNtw;WkhW jho;ikAld; Ntz;Lfpd;Nwhk;.


$Ljy; njhlHGfSf;F vd;w 416 628 1408 vz;iz mioAq;fs;.

Nghuhy; ghjpf;fg;gl;NlhUf;Fk; kdpj cupikfSf;Fkhd eLtk;

Centre for War Victims & Human Rights (CWVHR)


உடனே பதிந்து உதவிடுங்கள்

உங்கள் தரவுகள் பாதுகாப்பனதாக இருக்கும்

உங்களின் தரவுகள் தனிப்பட்ட பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்பட மாட்டா ??




Thursday, October 08, 2009

18-10-09: பிரித்தானியாவில் தியாகி திலீபன், அன்னை பூபதி நினைவுநாள்

17-10-2009: பிரித்தானியாவில் மாபெரும் பேரணி


சென்னையில் “தமிழினப் பாதுகாப்பு மாநாடு”


தமிழீழ தனியரசுக்கான வாக்கெடுப்பு மற்றும் ஜேர்மனி வாழ் ஈழத் தமிழர் அவையின் உருவாக்கம் தொடர்பான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழத் தனியசு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் முக்கிய நான்கு அடிப்படைகளை மீள வலியுறுத்தும் வாக்கெடுப்பு ஜேர்மனியில் நடைபெறவுள்ளது.

1976ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது 1977 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களால் வழங்கப்பட்ட மக்களாணையின் முக்கிய அடிப்படையான சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழ தனியரசு என்ற கொள்கையின் அடிப்படையில் ''ஜேர்மனியில் வாழ் ஈழத் தமிழர் அவை'' என்ற அமைப்பு ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

இவ்விரண்டு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் விரிவான கருத்தரங்கும் கலந்துரையாடலும் இடம் பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஜேர்மனியில் வாழும் அனைத்து ஈழத் தமிழ் மக்களையும் தவறாது கலந்து கொண்டு தங்களது முழுமையான ஆலோசனைகளையும் ஆதரவினையும் வழங்கி உதவும் வண்ணம் வேண்டுகின்றோம்.

இடம்: jürgens hof 61
44628 herne
காலம்: 10-10-2009
நேரம்: மாலை 18.00 மணி

Blog Archive