Friday, September 24, 2010

நினைவலைகள் வரும் நிகழ்வுகள்

24.09.2010: கனடா


25.09.2010: பிரான்ஸ்

25.09.2010: நோர்வே


26.09.2010: கனடா

26.09.2010: பிரித்தானியா

26.09.2010: இத்தாலி


02.10.2010: சுவிஸ்


03.10.2010: பிரித்தானியா

Friday, September 17, 2010

எழுவாய் தமிழா நெருப்பாய் பெல்யியம் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்


தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் மனித நேயர்கள் மூவரிநால். ஜெனிவா ஐநா முருகதாசன் திடலில் இருந்து பெல்யியம் ஐரோப்பிய பாராளுமன்றம் நோக்கி.


ஆரம்பிக்கப்பட்ட மனித நேய நடைபயணம் ஐரோப்பிய பாராளுமன்றத்தை வந்தடையும் நாளன்று. 27 .09 .2010 .திங்கள் நண்பகல் 2 மணிக்கு அவர்களின் கோரிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக எழுச்சி பொங்க அணிதிரண்டு வருமாறு தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் புலம் பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளையும் அன்போடு இரு இருகரம் கூப்பி உங்கள் வாசலில் வந்து உரிமையோடு அழைக்கிறோம். தாய் தமிழகத்தில் இருந்தும் தமிழீழத்தில் இருந்தும் தாயகத்தையும் தாயாக மக்களையும் நேசிக்கும் உணர்வாளர்கள் பலரும் கலந்துகொள்கிறார்கள்.

ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன்

*மக்கள் புரட்ச்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்*

தமிழீழ மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காக தமிழீழ தனியரசை அமைப்பதற்காக!

*முப்பத்து ஐந்து ஆயிரம் வீரர்கள் மரணித்துக் கேட்டார்கள்*

*ஆயிரம் வீரர்கள் கந்தக வெடியாக வெடித்துக் கேட்டார்கள்*

*இரண்டு தியாகிகள் உண்ணாமல் இறந்து கேட்டார்கள்*

*பல தியாகிகள் தீயிலே எரிந்து கேட்டார்கள்*

*பல உணர்வாளர்கள் உண்ணாமல் இருந்து கேட்டார்கள்*

*பல உணர்வாளர்கள் இப்போது நடந்து கேட்கிறார்கள்*

*நாங்கள் என்ன செய்யப் போகிறோம் சிந்திப்போம் செயற்படுவோம் எதையும் சந்திப்போம்*

!தமிழரசன்.தி.ஈழம்5 .கொம்!நன்றி

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

Monday, September 13, 2010

ஐ.நா சபைக்கு வரும் மகிந்த ராஜபக்ச மீது போர்க்குற்ற விசாரணை நடத்து - கனடியத்தமிழர்கள் அறைகூவல்

செப்டம்பர் மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபைக் ஆண்டுக் கூட்டத் தொடரில் பங்கு பற்றுவதற்காக சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச அமெரிக்கா வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு அவர் வருகை தருவாரானால் இலங்கைத்தீவில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அவரை விசாரணை செய்ய வேண்டுமென்று கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டுகோள் விடுத்துள்ளது.


“இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தை சிறிலங்கா அரசு வன்னியில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் ஈவிரக்கமின்றிக் படுகொலைசெய்யப்பட்டனர். இவற்றை மூடி மறைத்து சுயாதீன சர்வதேச நீதி விசாரணைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டுள்ளது” என்று சுட்டிக்காட்டியுள்ள கனடியத் தமிழர் தேசிய அவை, ஐ.நாவையும் அதன் விசாரணை முன்னெடுப்புக்களையும் அவமதிக்கும் மகிந்த ராஜபக்சவை கூட்டத்தொடரில் கலந்து கொள்ள அனுமதிப்பதே மிகப் பெரும் தவறு என்றும் கூட்டுக்காட்டியுள்ளது.

‘சனல் 4’ காணொளிகள் சித்திரவதைகளையும் படுகொலையையும் நிரூபிக்கின்றன. டப்ளின் மக்கள் ஆணையம் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகையை நிறுத்தியுள்ளது. ஐ.நா. சபையின் செயலாளர் போர்க்குற்ற விசாரணைக்கென நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளார்.

இந்நிலையில் சிறீலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச மீதான போர்க்குற்ற விசாரணையை தாமதமின்றி ஆரம்பிக்க வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐ.நா சபைக்கூட்டத் தொடரில் அவர் கலந்து கொண்டால் அவருடனான அனைத்து ராஐதந்திர தொடர்புகளையும் அங்கு தவிர்க்குமாறு கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தையும் கனடியத்தமிழர் தேசிய அவை கனடியத் தமிழ் மக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆவர்வளர்கள் அனைவர் சார்பிலும் வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது.

இவ்விடயங்களை வலியுறுத்தும் வகையிலும், அமெரிக்க அரசை இவ்விடயத்தில் முதன்மை பங்கை வகிக்குமாறு வலியுறுத்தியும் கனடியத் தமிழர் தேசிய அவை செப்டெம்பர் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 3:00 மணிக்கு ரொறன்ரோவில் (360 University Ave) அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னாலும், மொன்றியலில் (1155 rue St-Alexandré - Corner Of St-Alexandré & Rene Levesque ) அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்னலும் கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்தவுள்ளது.

இதில் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு கனடா வாழ் தமிழ் மக்கள் அனைவரும் உரிமையுடன் அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக தொடர்புகளுக்கு

தொலைபேசி இல: 1866 263 8622 Ext 101

மின்னஞ்சல் முகவரி: info@ncctcanada.ca

Thursday, September 09, 2010

பேரறிவாளனின் “தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்” – 5 ஆம் பதிப்பு வெளியீடு

இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று, தனது 19 வயது முதல், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைக்கொட்டடியில் வாடும் ஒரு இளைஞனின் உள்ளக் குமுறல்களை.. வாழ்க்கையை உலகுக்கு உணர்த்தும் வகையில் பேரறிவாளன் அவர்கள் எழுதி ஐந்தாவது பதிப்பாக வெளிவரவுள்ளது “தூக்குக்கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு

Blog Archive