Tuesday, December 01, 2009

பிரான்சு தழுவிய வாக்கெடுப்பு டிசெம்பர் 12 ம் 13 ம் நாள்களில் வாக்களிக்க தயாராகுவோம்


சிங்களத்தின் சிறைக்கூண்டில் எங்களது சொந்தங்கள், பொங்கு தமிழினத்தவர் நாம் இங்கிருந்து என்ன செய்வோம்? தமிழ்ஈழம் தான் எமது தீர்வு என்று 77ல் தீர்மானித்தோம், சிங்களத்துக்கும் சர்வதேசத்துக்கும் இடித்துரைத்து வெளிகொணர்ந்துள்ளோம்.

நமது சொந்த மண்ணிலேயே 3 இலட்சம் தமிழ் மக்கள் சிறைப்படிக்கப்பட்டுள்ள நிலையும் சிங்கள பௌத்த பயங்கரவாத அரசினதும் இன அழிப்புச் செயற்பாடுகளையும், சர்வதேசம் கண்டு எமக்காக கண்திறந்து செயற்படும் வேளையில் நாம் கண்மூடிக்கிடக்க முடியாது.

சர்வதேசம் எமக்காகச் சிங்களத்தைத் தட்டிக்கேட்க எமது தமிழ்ஈழம் என்ற முடிந்த முடிவை மீண்டும் துரும்புச்சீட்டாக்கி அதை அடையும் வரை வீதிகள்தான் எம் வீடு விடியும் வரை போராடு என்ற தாரக மந்திரத்தை மனதிற் கொண்டு

மார்கழி 12,13 திகதிகளில் பிரான்சில் நடைபெறவிருக்கும் தமிழ்ஈழம் தான் இறுதித்தீர்வு என்ற எமது ஏகோபித்த விருப்பை தெரிவிக்கும் கருத்துக்கணிப்புக்கான தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழீழ உணர்வாளர்களின் உதவியை நாடிநிற்கின்றோம்.

வட்டுக்கோட்டை தீர்மானத்தை மீள்வலியுறுத்தி தமிழரின் தாகத்தை .......

தரணிக்கு கூறிடுவோம் ...

தொடர்புகளுக்கு:

திரு 0615884221

தமிழீழமக்கள் பேரவை பிரான்ஸ்

Blog Archive