Thursday, April 29, 2010

ஒன்றிணைந்து ஒரணியில் நின்று பலப்படுவோம்

பெரிதாகப் பார்க்க படத்தில் அழுத்தவும்

Wednesday, April 21, 2010

நாடு கடந்த அரசுக்கு மே 2 இல் வாக்களிப்போம்

தமிழர்களின் புதிய படையணியைத் தெரிவு செய்வோம்

Posted   Image

Sunday, April 18, 2010

அன்னை பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பிய கண்டித்து நாம் தமிழர் கண்டனப் பொதுக்கூட்டம்


தாயார் பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காததைக்கண்டித்து இன்று கூடலூரில் நாம் தமிழர் இயக்கம் கண்டனப்பொதுக்கூட்டம் நடத்துகின்றனர். இதில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் கண்டன உரையாற்றுகிறார்.

கடும் உடல் நலிவோடு மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்த தமிழினத் தேசிய தலைவர். மேதகு.பிரபாகரனின் தாயாரும், எம் இனத்தின் தாயாருமான பார்வதி அம்மாள் அவர்களை தமிழக மண்ணில் அனுமதிக்காத, மனித தன்மையற்ற மத்திய மாநில அரசுகளை கண்டித்து இன்று நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள காந்தி திடலில் இன்று ஞாயிறு மாலை 3 மணிக்கு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இந்தக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகின்றார்.கூட்டத்தில் மாநிலம் முழுவதிலுமிருந்து இயக்கத்தினர் கலந்து கொள்கின்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கூடலூர் பகுதிப்பொறுப்பாளர்கள் செய்து வருகின்றனர்.

Tuesday, April 13, 2010

பேசப்படாத இனப்படுகொலை - இலங்கையின் போர்க் குற்றங்கள்-மாநாடு


தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன.

இது தொடர்பில் அவை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தில்லி தமிழ் மாணவர்கள் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாநாடு

நாள் : 15 ஏப்ரல் 2010 – வியாழன்

நேரம் : மதியம் 2 மணி முதல்
http://meenakam.com/wp-content/uploads/2010/04/unspoken-genocide-final_reduced-3.jpg

பங்கேற்போர் :
http://meenakam.com/wp-content/uploads/2010/04/unspoken-genocide-final_reduced-2.jpg
இலங்கையின் போர்க்குற்றத்தை உலகிற்கு அம்பலபடுத்திய டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தில் அங்கம் வகித்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜிந்தர் சச்சார்

உச்சநீதிமன்ற நீதிபதி முன்னாள் நீதியரசர் கிருஷ்ணையர்

அனைத்துலக மனித உரிமை கழகத்தின் விராஜ் மென்டிஸ்

இலங்கை பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி

தமிழ்நாடு பியுசிஎல் தலைவர் சுரேஷ்

பியுசியல் முன்னாள் தலைவர் கண்ணபிரான்

சண்டிகர் முன்னாள் நீதிபதி அஜித் சிங் பைன்ஸ்

புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தை சார்ந்த கவிஞர் வரவர ராவ்

அரசியல் கைதிகள் விடுதலை குழுவை சார்ந்த பேராசிரியர் எஸ்ஏஆர் கிலானி

காஷ்மீர் அனைத்து கட்சி ஹுரியத் குழுவை சார்ந்த சையத் அலிஷா கிலானி

உலக சீக்கிய செய்திகள் ஆசிரியர் ஜக்மோகன் சிங்

அனைத்துலக மக்கள் போராட்ட லீகின் துணை தலைவர் சாய் பாபா

மார்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சார்ந்த கவிதா கிருஷ்ணன்

இடம் : ஸ்பீக்கர் ஹால்

கான்ஸ்டியூசன் கிளப்
ரஃபி மார்க்
புது தில்லி

இந்திய தலைநகர் டெல்லியில் “Unspoken Genocide: War crimes in Sri lanka” (மறைக்கப்பட்ட இனப்படுகொலை : இலங்கையின் போர்குற்றம் ) என்ற தலைப்பில் வரும் ஏப்றல் 15 ஆம் திகதி டெல்லி பல்கலைக்கழக தமிழ் மாணவர்களால், dublin மக்கள் தீர்ப்பாயத்தோடு இணைந்து மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு நமது மீனகம் தளத்தில் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உறவுகள் அனைவரும் கட்டாயம் காணவேண்டிய நிகழ்வு இது…

இலங்கை அரசின் போற்குற்றத்தை அம்பலபடுத்துவோம்… குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தந்தே தீருவோம்…


Thursday, April 08, 2010

பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை அறிவித்தல்

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம் மற்றும் பேரணி, பொதுக்கூட்டம்

நாம் தமிழர் அரசியல் இயக்கம் கொடி அறிமுகம், மற்றும், பேரணி, பொதுக்கூட்டத்திற்க்கு செல்ல சென்னை மாவட்ட பொருப்பாளர் அதியமான் அவர்களால் சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
09.04.10 அன்று வெள்ளிக்கிழமை இரவு 10.மணியளவில் கோயம்பேட்டில் இருந்து பேருந்து புறப்படும்.

கூட்டத்திற்கு வர விரும்பும் நண்பர்கள் வருகிறவர்கள் முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

தொடர்புக்கு: அதியமான்

சென்னை மாவட்ட பொருப்பாளர்

Tel: 9962560760 or 9841994404


Blog Archive