Monday, January 19, 2009

இந்திய தூதரகம் முன்பாக அமெரிக்க தமிழர்கள் மாபெரும் கண்டனப் பேரணி

அமெரிக்க தமிழ் செயற்பாட்டு ஒருங்கிணைப்பு அமைப்பான "அமெரிக்கத் தமிழர்களும் நண்பர்களும்" (Tamil Americans and Friends - TAF) எதிர்வரும் வெள்ளிக்கிழமை வோசிங்டன் டி.சி.யில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பாக மாபெரும் பேரணிக்கு ஒழுங்குகளை மேற்கொண்டு வருவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழீழத்தின் வன்னிப் பகுதி மீது தற்போது சிறிலங்கா படைகள் மேற்கொண்டு வரும் பாரிய படையெடுப்பின் ஊக்க சக்தியாக இந்தியா இருப்பதாகக் கருதப்படும் பின்னணியில் இப்பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில்...

சுவிற்சர்லாந்தில் நாளை மறுநாள் அவசரகால ஒன்றுகூடல்

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடலுக்கு சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த ஒன்றுகூடல் நாளை மறுநாள் புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும்.இதில்- தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும்- போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு...

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து 23 ஆம் நாள் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

ஈழத் தமிழருக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசினை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23.01.09) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தா.பாண்டியன் ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளதாவது:வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் சிறிலங்கா அரசாங்கத்திடம் போர் நிறுத்தம் குறித்து பேசவில்லை. இங்கிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகிறது என்பதை பற்றி அறியத்தான் சென்று உள்ளார்.மேலும்...

அமெரிக்கத் தூதரகம் முன்பாக நாளை நோர்வ தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

தமிழின அழிப்பை தடுக்கக் கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் நோர்வேயில் தொடர்ச்சியாக பல கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.அந்த வரிசையில் நாளை செவ்வாய்க்கிழமை (20.01.09) காலை 9:30 நிமிடம் முதல் 10:30 நிமிடம் வரை நோர்வேயில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.சிங்கள பேரினவாத அரசின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்புப் போரினைத் தடுத்திட, உடனடிப் போர் நிறுத்தத்திற்கான அழுத்தத்தினை சிறிலங்கா அரசாங்கத்திற்கு...

[19/01/2009 - திங்கள்] "பிரான்சில் மாபெரும் ஒன்றுகூடல்"

...

[18/01/2009 - ஞாயிறு] ''சுழற்சி முறையிலான உண்ணாநிலை"

...

Blog Archive