Monday, January 19, 2009

சுவிற்சர்லாந்தில் நாளை மறுநாள் அவசரகால ஒன்றுகூடல்

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழ் மக்களை காப்பதற்கான அவசரகால ஒன்றுகூடலுக்கு சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த ஒன்றுகூடல் நாளை மறுநாள் புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு ஜெனீவா நகரின் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மைய முன்றலைச் சென்றடைந்து கண்டனப் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெறும்.
இதில்

- தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை உடனே தடுத்து நிறுத்தவும்

- போர் நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜ.நா. உட்பட அனைத்துலக சமூகம் அழுத்தம் கொடுக்கவும் வேண்டும்

என்ற கோரிக்கை முன்வைக்கப்பட உள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஒன்றுகூடலில் பெருந்திரளாக சுவிஸ் வாழ் தமிழர்கள் கலந்து கொண்டு எமது மக்களின் அவலங்களை இந்த உலகத்துக்கு எடுத்துரைப்போம்.

வரலாற்றில் இதுவரையில் இல்லாத மாபெரும் மனித அவலங்களை எமது இனம் எம் சொந்த பூமியில் சந்தித்து வருகின்றது. விரைந்து செயற்பட்டு எமது மக்களின் வாழ்வை மீட்டெடுப்பது எமது கடமை.

அனைத்து மாநிலங்களிலும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என சுவிற்சர்லாந்து தமிழ் இளையோர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilnaatham.com/advert/2009/jan/20090119/20090119/SWISS/

Blog Archive