Wednesday, January 21, 2009

"அன்னை அழைக்கிறாள்" கனடிய தமிழரின் 150 மணிநேர ஒன்றுகூடல்

சிறிலங்காவின் மகிந்த அரசாங்கத்தினை அனைத்துலக சமூகத்தின் முன் அம்பலப்படுத்தும் பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கில் கனடாவில் "அன்னை அழைக்கிறாள்" எனும் 150 மணிநேர தொடர் எழுச்சி நிகழ்வு தொடங்கியுள்ளது.

ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் நேற்று முன்நாள் திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு தொடங்கியது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 12:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த எழுச்சி நிகழ்வில் சுழற்சி முறையிலான உண்ணாநிலை நடைபெறும் அதேவேளை, பல்வேறு தொடர் பரப்புரை வேலைத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு களமாகவும் அது செயற்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இலகுவாக சென்றடையக்கூடிய

3840 Finch ave East அமைந்துள்ள மெற்றோபொலிட்டன் அரங்கிலேயே இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கனடிய தமிழர் அமைப்புக்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Blog Archive