Friday, September 11, 2009

நோயுற்ற சிறார் அமைப்புக்கான ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’


அன்பான தமிழ் உறவுகளே !!


கனடியத் தமிழர் பேரவை ஒருங்கிணைக்கும் நோயுற்ற சிறார் அமைப்புக்கான 2009ஆம் ஆண்டின் ‘கனடியத் தமிழர் நிதி சேர் நடை’ நிகழ்விற் கலந்து கொண்டு உங்கள் பங்களிப்பினை வழங்குமாறு கனடியத் தமிழர் பேரவை உங்களை அன்புடன் அழைக்கின்றது. கனடாவாழ் தமிழ் மக்களின் இத்தகைய முன்னெடுப்பும் பங்களிப்பும் தமிழ் மக்கள் மீது நல்லெண்ணத்தையும் பெருமதிப்பையும் உருவாக்குவதுடன் எங்கள் சமூகத்தின் எதிர்காலத்திற்கு வலுச் சேர்ப்பதாயும் அமையும்.

செப்டெம்பர் 20ம் திகதி ஞாயிறு நடைபெறப்போகும் இந் நடைபவனியில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கனடிய தமிழர் பேரவை எதிர்பார்க்கின்றது. அரசியல் வாதிகளும் மற்றும் பல்வேறு சமூகதலைவர்களும் பங்கு பெறும் இந் நிகழ்வானது காலை 9 மணிக்கு Thomson Memorial Parkல் ஆரம்பித்து மதியம் 2 மணியளவில் Albert Campbell Square இல் நிறைவுபெறும்.

இடம்: Thomson Memorial Park ல் ஆரம்பித்து Albert Campbell Square இல் நிறைவுபெறும்.

காலம்: செப்டெம்பர் 20, ஞாயிறு
நேரம்: காலை 9 மணி – மதியம் 2 மணி

மேலதிக விபரங்களுக்கு:

(416) 240 – 0078 அல்லது http://www.canadiantamilcongress.ca/sickkids/


உங்கள் ஆதரவுக்கு நன்றி!

இங்ஙனம்,

கனடிய தமிழர் பேரவை

Blog Archive