Thursday, February 05, 2009

"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்"

அன்பானவர்களே


"யுத்த அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவோம்"

"எமக்கு தேவை சமாதானம் மட்டுமே"

"மக்களை மக்களாக நடத்துங்கள்"


என்ற கோரிக்கைகளோடு சுதந்திர மாணவர் முன்னணியினராகிய நாம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை கொழும்பில், பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லுரிக்கு முன்பாக நாளைய தினம் முழுவதும் (06-02-09) மேற்கொள்ள உள்ளோம்.இது தொடர்பான செய்தி இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தாங்கள் சார்ந்த செய்தி நிறுவனம்,செய்தி இணையத்தளம் போன்றவற்றில் இந்தச் செய்தியினை பிரசுரம் செய்வதோடு தங்களுக்கு தெரிந்த செய்தி இணையத்தளங்களுக்கு அனுப்பி உதவ வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, மேலும் தங்களால் முடிந்த அளவு அதரவை தேடித்தாருங்கள் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.

கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உண்ணாவிரதம் நடை பெறுகின்ற இடத்திற்கு வருகை தந்து, எங்கள் கோரிக்கைகளை வலுப்படுத்தி எமது ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

சர்வதேச சமுகத்தில் உள்ள அனைத்து தமிழ்மக்களினதும் ஆதரவையும் எதிர்பார்த்து காத்து நிற்கின்றோம்.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு"


நன்றி
சுதந்திர மாணவர் முன்னணி

Blog Archive