Saturday, January 22, 2011

வெள்ளை மாளிகை முன் போராட்டம்: ஒபாமாவுக்கான தமிழர்கள்



அமெரிக்காவில் தங்கியுள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவை கைதுசெய்யக்கோரி அமெரிக்க அதிபரின் மாளிகையான வெள்ளை மாளிகை முன்பாக எதிர்வரும் திங்கட்கிழமை (24) போராட்டம் ஓன்றை மேற்கொள்ளப்போவதாக ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்கா அரச தலைவரை கைது செய்யுமாறு அல்லது அவரை நாடுகடத்துமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க நீதி ஆணையாளரை பணிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.

மகிந்தா ஒரு சர்வதேசப் போர்க்குற்றவாளி, தமிழ் இன அழிப்பிலும், பெரும் தொகை தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும், தமிழ் மக்களை காமாமல்போகச் செய்ததிலும், பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான வன்செயல்களிலும் அவருக்கு பங்குண்டு. எனவே அனைத்துலக சட்டங்களின் படி அவர் கைது செய்யப்படவேண்டும்.

போராட்டம் நடைபெறும் இடம்: Lafayette Square , In front of the White House, Washington , DC

நேரம்: காலை 11.00 மணிமுதல் மாலை 3.00 மணிவரை.

காலம்: திங்கட்கிழமை, 24.01.2011.

எனவே தமிழ் மக்கள் எல்லோரும் எமது இந்த போராட்டத்திற்கு ஆதரவுகளை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை முன் போராட்டம் - அமெரிக்க தமிழர்களுடன் இணையும் கனடியத் தமிழர்கள்

அமெரிக்கா வந்துள்ள சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஐபக்சாவை கைது செய்யுமாறு அல்லது நாடு கடத்துமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க நீதி ஆணையாளரை பணிக்க வேண்டும் என்பதை வலியுறித்தி அமெரிக்க தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை WASHINGTON, DCஇல் உள்ள வெள்ளை மாளிகை முன்பாக மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

அமெரிக்க தமிழ் மக்களுடன் கனேடிய தமிழ் மக்களாகிய நாங்களும் இணைந்து மகிந்த ஒரு சர்வதேச போர்க்குற்றவாளி, பெரும் தொகையான தமிழ் மக்களை படுகொலை செய்ததிலும் தமிழ் இன அழிப்பை மேற்கொண்டும் தமிழ் மக்களை காணாமல் போகச் செய்ததிலும் பாலியல் வன்முறைகள் மற்றும் தமிழ் மக்கள் மீதான வன்முறைச்செயல்களை மேற்கொண்ட மேற்கொண்டு கொண்டு இருப்பவர்களில் அவருக்கும் பங்கு உண்டு, எனவே அனைத்துலக சட்டங்களின் படி உடனடியாக அவரை கைது செய்யுமாறு கோரி நடக்கும் இப்போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக, அமெரிக்கா வொசிங்டன் நகருக்கு செல்வதற்கான போக்குவரத்து ஒழுங்குகளை கனேடியத் தமிழர் தேசிய அவை ஒழுங்கு செய்துள்ளது.

அமெரிக்கா செல்வதற்கான வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது அதற்கான உங்கள் பதிவுகளை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து உடனடியாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


இதில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றனர்.

கனேடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி இலக்கம் :

416 - 880 - 6057 அல்லது 416 - 646 - 7624

Blog Archive