Wednesday, September 23, 2009

பிரான்சில் தியாக தீபம் திலீபனின் 22ம் ஆண்டு நினைவுநாள்

தமிழின விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிய பெருவீரன் திலீபன். தியாகத்தின் உச்சத்தைத்தொட்டு ஈழத்தமிழனின் ஓர்மத்தையும், விடுதலைப்பற்றையும், அரசியல் அவாவையும் உலகிற்க்குச்சொன்னவர்.

நல்லூர் வீதியில் பன்னிரு நாட்கள் பசிகிடந்து ஆகுதியாகிய லெப்.கேணல் திலீபன் அவர்களின் 22வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே பிரான்சில் தியாக தீபம் திலீபனின் நினைவாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு தமிழ் இளையோரால் முன்னெடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் சனிக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நினைவு வணக்க நிகழ்வானது நடைபெறவுள்ளது.

காலம்: 26.09.2009 சனிக்கிழமை

நேரம்: 15.00மணி

இடம்: அன்வர்ஸ்(Anvers -வைற் சேர்ச்)

Métro 2: ANVERS


Blog Archive